“பூஸ்ட்” தந்த கர்நாடகா.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி! விரைவில் எதிர்கட்சிகளின் மாநாடு

India oi-Noorul Ahamed Jahaber Ali பாட்னா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கொண்ட பிரம்மாண்ட மாநாட்டை பீகாரில் கூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் 2024 ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் கடந்த ஓராண்டாகவே … Read more

கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ்

LIVE கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ் India oi-Nantha Kumar R பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று … Read more

கள்ளச்சாராயம் விவகாரம்: காவல் அதிகாரிகள் இடமாற்றம்.. விழுப்புரம் சரக டிஐஜியாக ஜியா உல் ஹக் நியமனம்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த இடத்திற்கான புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று16-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக … Read more

துரோகிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை..ஈபிஎஸ் பரபர

Tamilnadu oi-Mani Singh S சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை டிடிவி தினகரன் துரோகி என்றார். திமுக எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஒபிஎஸ் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுகவை அவர்களால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- நகமும் … Read more

சிஎஸ்கேவின் மஞ்சள் நிற சேலையில்.. முந்தானையை சொருகியபடி! மதுக்கரையில் நமீதா என்ன செய்தார்னு பாருங்க

Tamilnadu oi-Vishnupriya R கோவை: கோவையில் சிஎஸ்கே ஜெர்சியின் நிறமான மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து கொண்டு நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா கிரிக்கெட் விளையாடி அசத்தினார். நமீதா என்றாலே நல்ல உயரம், அழகு, கவர்ச்சி, சிரிக்கும் போது ஏற்படும் குழி இவைதான் ஞாபகத்துக்கு வரும். அவர் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழுக்கு ரசிகர்கள் அடிமை. அத்துடன் பட பிரமோஷன்களில் அவர் ஹாய் மச்சான்ஸ் என அழைப்பார். இந்த வார்த்தையை கேட்டதும் இளைஞர்கள் துள்ளி குதிப்பார்கள். இப்படி … Read more

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் … Read more

கள்ளச்சாராய விவகாரம்.. ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. விழுப்புரம் எஸ்.பி சஸ்பெண்ட்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

\"ரீல் முதல் லிப்லாக் வரை..\" டெல்லி மெட்ரோவில் இப்போ என்ன நடந்து இருக்கு! நெட்டிசன்கள் சொல்வது என்ன

India oi-Vigneshkumar டெல்லி, சென்னை, பெங்களூர் என நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் கனேக்டிவிட்டிக்கு முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது மெட்ரோ. டிராபிக் பிரச்சினை இல்லை, பன்சுவாலிட்டி என மெட்ரோவை விரும்பப் பல காரணங்கள் இருக்கிறது. நாட்டின் மிக விரிவான மெட்ரோ சேவையை கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. டெல்லி மெட்ரோவை ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். டெல்லி மெட்ரோ: அதேநேரம் டெல்லி மெட்ரோவில் நடக்கும் பல சம்பவங்கள் … Read more

ஒரே \"சவுண்ட்!\" 3 சிறுவர்களையும் அப்படியே விழுங்க பார்த்த நீர்யானை! ஐயோ பயங்கர பரபரப்பு! ஷாக் சம்பவம்

International oi-Vigneshkumar ரியோ டி ஜெனிராயா: ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. நீச்சல் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி செய்யும் ஒரு நிகழ்வாகும். ரிலாக்ஸ் செய்ய, எடை குறைக்க ஒரு உடற்பயிற்சியாகவும் கூட நீச்சல் பயன்படும். இதனால் பலரும் நீச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் அதைச் சுற்றிப் பல ஆபத்துகளும் சூழ்ந்தே இருக்கிறது. சுறாக்கள், முதலைகள் உள்ளிட்ட ஆபத்தான விலங்குகள் இயற்கை நீர் … Read more