உலகின் காஸ்ட்லியான மாம்பழம்.. ஒன்று 40,000 ரூபாயாம்.. இந்த விலைக்கு என்ன காரணம்! டேஸ்ட் எப்படி

International oi-Vigneshkumar டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உற்பத்தி செய்யும் மாம்பழம் ஒன்றை அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பனை செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோடைக் காலம் வந்துவிட்டது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கணிசமாகவே இருக்கிறது. சில காலமாகவே மழை பெய்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கணிசமாக வெயில் இருந்தே வருகிறது. அதேபோல கோடைக் காலத்திற்கான பழங்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சீசனில் மாம்பழங்களின் விற்பனையும் … Read more

அதிகாலையில் குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்

International oi-Nantha Kumar R காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென பூமி குலுங்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தியா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இறந்தனர். இந்த நிலநடுக்கத்தில் துருக்கி பெரிய பாதிப்பை சந்தித்தது. இதையடுத்து நிலநடுக்கம் குறித்து மக்கள் அதிக பயத்தை எதிர்கொண்டு … Read more

சென்னை எழும்பூரில்.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக.. பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் அடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணி மாறுதல் செய்யப்பட்டார்கள். இதன் காரணமாகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல இடங்களுக்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அவர்கள் … Read more

Flash Back: \"என்ன அசிங்கப்படுத்தினர்..!\" தர்மயுத்தம் போது.. சசிகலா பற்றி ஓபிஎஸ் சொன்னது நினைவிருக்கா

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: ஓபிஎஸ் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அவருடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தர்ம யுத்தம் சமயத்தில் என்னவெல்லாம் சொன்னார் என ஞாபகம் இருக்கிறதா.. அது குறித்துப் பார்க்கலாம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தனர். அப்போது கடந்த காலங்களை மறந்து இருவரும் … Read more

\"சென்னையின் செல்ல பிள்ளை தோனி.. நீங்க தொடர்ந்து விளையாட வேண்டும்..\" முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சராக இப்போது உதயநிதி உள்ளார். உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பை இலச்சினை, சின்னம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், … Read more

அரசியலில் எதுவும் நடக்கலாம்.. டிடிவி தினகரன் – ஒபிஎஸ் சந்திப்பால் பாதிப்பு இல்லை.. வைகை செல்வன்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: ஓ பன்னீர் செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இவர்களது சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஒ பன்னீர் செல்வம் ஒருபக்கம் சட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டே மற்றொரு பக்கம் மக்கள் மன்றத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் எனக் கூறி வருகிறார். இதன்படி … Read more

4 வயது சிறுமிக்கு அந்தரங்க உறுப்பில் சூடு.. தத்தெடுத்த குழந்தையை சித்ரவதை செய்த மருத்துவ தம்பதி கைது

India oi-Vishnupriya R குவாஹாத்தி: 4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியை சேர்ந்தவர் சங்கீதா தத்தா. இவர் ஒரு மனநல மருத்துவர். இவருடைய கணவர் வளியுள் இஸ்லாம். இவர் ஒரு குடல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். குழந்தையே இல்லாத அந்த தம்பதி அந்த குழந்தையை தத்தெடுத்து தாலாட்டி, சீராட்டி வளர்ப்பார்கள் என எதிர்பார்த்தால் அவர்களோ … Read more

\"கருப்பா\" அதென்ன.. அத்தனை பேர் நிற்க, அதுபாட்டுக்கு கூலா போகுதே.. மன்னர் சார்லஸ் விழா \"அமானுஷ்யம்?\"

International oi-Hemavandhana லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதாவது மே 6ம் தேதி இங்கிலாந்தில் சார்லசின் முடிசூட்டு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.. இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது.. காரணம், 70 வருடங்கள் கழித்து பாரம்பரிய விழா மீண்டும் அந்நாட்டில் நடப்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் போடப்பட்டிருந்தது. பிரம்மாண்டம்: … Read more

“கலர்புல்”ஆகும் காசிமேடு “பீச்”.. வடசென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்! ரூ.30 கோடியில் அழகாக்கும் அரசு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: மத்திய சென்னையில் மெரினா கடற்கரை, தென் சென்னையில் திருவான்மியூர், பெசண்ட் நகர் போன்ற கடற்கரைகள் மக்களின் பொழுதுபோக்கிற்காக இருக்கும் நிலையில், வட சென்னை மக்களின் பயன்பாட்டுக்காக பார்வதி நகரிலிருந்து காசிமேடு வரை 5 கிமீ நீள கடற்கரையை ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு அரசு மேம்படுத்த உள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள வட சென்னை பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு அதற்கான … Read more

கடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில் வெறித்தனம்

International oi-Noorul Ahamed Jahaber Ali இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது கடவுள் மறுப்பை பேசிய மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் … Read more