நீட் தேர்வு தள்ளி வைப்பு.. மணிப்பூர் கலவரத்தால் அரசு முடிவு.. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

India oi-Vignesh Selvaraj இம்பால் : மணிப்பூரில் நிலவி வரும் கலவரம் காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று நாளை நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நீட் தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி என்ற சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மெய்தி சமூகத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பழங்குடியினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். பழங்குடியினருக்கும் மெய்தி சமூகத்தினருக்கும் இடையே … Read more

\"அப்பிய சோகம்\".. கண்ணெல்லாம் இருண்டு போய், நிலைகுலைந்த டாக்டர் விஜயபாஸ்கர்.. \"ஐய்யோ போயிட்டானே\"..!

Tamilnadu oi-Hemavandhana சென்னை: மாஜி அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. துயரத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முடியவில்லை.. பிரிந்து சென்ற கருப்பு கொம்பனை நினைத்து நினைத்து உருகி கொண்டிருக்கிறார்..!! முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர், பல காளைகளை ஆசையுடன் வளர்த்து வருகிறார். இந்த காளை வளர்ப்பில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க ஸ்பெஷலாக பணியாட்களை நியமித்துள்ளார்.. அந்த காளைகளுடன் … Read more

'ரிப்போர்ட் புக்' தயாரிக்கும் திமுக எம்.பி.க்கள்! ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெறப் போவது யார்?

Tamilnadu oi-Arsath Kan சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி செயல்பாடுகள் குறித்த அறிக்கையை புத்தகமாக தயாரித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினிடம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஓராண்டு கூட இல்லாததாலும், தேர்தல் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்பதாலும் ரிப்போர்ட் புக் தயாரிக்கும் பணிகளில் திமுக எம்.பி.க்கள் மும்முரம் காட்டுகின்றனர். திமுக மக்களவை எம்.பி.க்களில் தருமபுரி செந்தில்குமார், வடசென்னை கலாநிதி வீராசாமி, தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் … Read more

சென்னையில் ஒரு விழாவில் கிழிந்த சட்டையுடன் பங்கேற்ற நடிகர் விஷால்.. பின்னணியில் நெகிழ்ச்சி சம்பவம்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: சென்னையில் ஒரு விழாவில் கிழிந்த சட்டையுடன் நடிகர் விஷால் கலந்து கொண்டிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் பலர் தங்களால் இயன்ற உதவிகளை அறக்கட்டளைகளை வைத்து செய்து வருகிறார்கள். கல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் உதவி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷாலும் சினிமாவைத் தாண்டி பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். இவர் சென்னையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் வில்லேஜ் டிக்கெட் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு … Read more

‛தி கேரளா ஸ்டோரி’-க்கு எதிர்ப்பு.. சென்னையில் நாம் தமிழர் போராட்டம்.. பிரதமரால் கொதித்த சீமான்

Tamilnadu oi-Nantha Kumar R சென்னை: ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். ஹிந்தி திரைப்பட இயக்குனராக இருப்பவர் சுதிப்தோ சென். இவரது கதை எழுதி இயக்கி இருக்கும் படம் ‛தி கேரளா ஸ்டோரி’. இந்த திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு … Read more

ரூ 10 லட்சம் ஷூக்களை ஸ்கெட்ச் போட்டு திருடிய 3 பேர்! நோ யூஸ்! திருடியது பூரா வலது கால் ஷூக்களாம்!

International oi-Vishnupriya R லிமா: ஷூக்கடையில் ஒன்றுத்துக்கும் உதவாத வகையில் வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய சம்பவத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் பெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பணம், நகை திருட்டு போய் ரூ 10 மதிப்புள்ள பொருட்களையும் ரிஸ்க் எடுத்து திருடும் கும்பல் இருக்கத்தான் செய்கிறார்கள். மது கடைக்குள் புகுந்து மதுபான பாட்டில்களை திருடும் நபர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் சில இடங்களில் திருட வந்துவிட்டு டயர்ட்டாகி அங்கேயே படுத்து உறங்கி காலையில் … Read more

எல்லை மீறிய வன்முறை.. மணிப்பூரில் ஆர்ட்டிக்கிள் 355 அமல்! அப்படினா?மத்திய அரசு அதிரடி.. பரபர பின்னணி

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வன்முறையாளர்களை கண்டவுடன் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்போது ஆர்ட்டிக்கிள் 355யை மத்திய அரசு அமல்படுத்தி உள்ள பரபர தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மணிப்பூர், திரிப்புரா, சிக்கிம், நாகலாந்து, அசாம், மேகாலயா, மிசோராம் உள்ளிட்டவை வடகிழக்கு மாநிலங்களாக அழைக்கப்படுகின்றன. நிலப்பரப்பு மற்றும் … Read more

ஜாக்பாட்.. 1 லட்சம் பேருக்கு ஓய்வூதிய பயன்கள்! புதுமை பெண் திட்டத்தில் ஆணை.. இன்று அசத்தும் ஸ்டாலின்

Tamilnadu oi-Nantha Kumar R சென்னை: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதி பயன்களை வழங்குவதோடு, புதுமை பெண் மற்றும் நான் முதல்வர்ன திட்டங்களின் கீழ் ஆணைகளும் வழங்கி அசத்த உள்ளார். மேலும் ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் அவர் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவு … Read more

மொத்தம் 10 நாட்கள்.. 4 நாடுகள்.. முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் உறுதி

Tamilnadu oi-Velmurugan P சென்னை: மே 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்வது உறுதியாகி உள்ளது. தமிழ் நாட்டிற்கு முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்கிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தொடர் முதலீடுகள் … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்.. 5 பேர் பலி.. வைகை ஆற்றில் மிதந்த சடலங்கள்.. பதறிய பக்தர்கள்!

Tamilnadu oi-Vignesh Selvaraj மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்வதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் வைகை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 5) அதிகாலை 6 மணியளவில் நடந்தது. இதையொட்டி, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு கரையை தொட்டு … Read more