சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும்  என்றும் , வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் … Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுராந்தகத்தில் 18ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

செங்கல்பட்டு: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் வரும் 18ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. 18.11.2023 அன்று காலை 08.00 மணி முதல் … Read more

மறைந்த சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை – நாளை இறுதி சடங்கு…

சென்னை: மறைந்த சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  சங்கரய்யா உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலி, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கரய்யா காலமான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யா … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ…

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிரபல ரவுடி கருக்கா வினோத் சென்னை  கிண்டியில்  உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான். இதை கண்ட காவலர்கள் அவரை மக்கி வைத்து செய்தனர்.  அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளைப் போலீசார் … Read more

தொடர் மழையால்  முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்

சென்னை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் மூழு கொள்ளளவை எட்டி உள்ளன. தலைநகர் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து … Read more

இன்று சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

சென்னை சென்னை நகரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று … Read more

திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை

திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இன்று நண்பகல் இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் தலைநகர் கொழும்புவில் இருந்து தென் கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவில் நன்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் … Read more

பயணிகள் குறைவால் சென்னை – பெங்களூரு விமானம் ரத்து

சென்னை போதுமான பயணிகள் இல்லாததால் சென்னை – பெங்களூரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. வரும் 16 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 1 வாக்கில் நிலவக்கூடும். இன்று இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என … Read more

முழுமையாக நிரம்பிய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்ச்புரம் மாவட்டத்தில் உள ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. வரும் 16 ஆம் தேதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

காற்று மாசு அதிகரிப்பால் ஜெய்ப்பூருக்குச் செல்லும் சோனியா காந்தி

டில்லி டில்லி நகரில் காசு மாசு அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போய்ஹு தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இங்கு காற்றின் தரக்குறியீடு 375 என மிக மோசமான நிலையில் இருப்பதால் வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாகச் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் டில்லியில் நிலவும் காற்று மாசுவால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, … Read more