சீமான் சர்ச்சை பேச்சு: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  அருந்ததியினர் குறித்து சீமான் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. அங்கு நாம் தமிழர்கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் சீமான் பரப்பரை மேற்கொண்டார். அப்போது, அருந்ததியர் சமூக மக்கள் தூய்மைப் பணிக்காக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் … Read more

கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமண செலவு ரூ.50ஆயிரமாக உயர்வு!

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்திற்கான செலவுத்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்தில் ஏழை எளிய ஒரு இணைகளுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவு 20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், கோவில்களில் இலவச  திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.  இதில் பயன்பெற … Read more

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை : இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 20ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு … Read more

ஊழல்வழக்கு பதிய அனுமதி – சிபிஐ சம்மன்: டெல்லி துணைமுதல்வரை கைது செய்ய மத்தியஅரசு முடிவு?

டெல்லி: மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த … Read more

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் வசூலான உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழனி: தைசப்பூசத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில்  உண்டியல்கள் மூலம் 5 கோடியே 9லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில்லரைகள் எண்ணும் பணி இன்றும்  நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இங்குள்ள முருகன், போகரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ குணமுடையது. இதனால், இங்குள்ள முருகனை தரிசித்தால், வேண்டுவோரின் நோய் நொடிகள் குணமாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவில்,  திண்டுக்கல் மாவட்டம் … Read more

பணப்பட்டுவாடா: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக மனு…

சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக தேர்தல்அதிகரியிடம் தேமுதிக தரப்பில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில்,   தேர்தல் விதி மீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில், இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453இன் கீழ் 50 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன என்றும் கூறியதுடன், இதுவரை தேர்தலை ரத்து செய்யக்கோரி … Read more

செஸ் விளையாட்டின் மையமாக திகழும் தமிழ்நாடு: கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி விக்னேஷ் புதிய சாதனை…

சென்னை: இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே, தமிழ்நாட்டில் இரண்டு கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள நிலையில், 3வது கிராண்ட் மாஸ்டராக விக்னேஷ் சிவன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு செஸ் விளையாட்டின் மையமாக திகழ்கிறது என்னும் பெருமை பெறுகிறது. ஜெர்மனியில் 24வது நார்ட் வெஸ்ட் 2023 செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் ஜெர்மனி நாட்டைச் … Read more

கட்சி, சின்னத்தை தொடர்ந்து, சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு!

டெல்லி: பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா இன்று இரண்டாக உடைந்துள்ள நிலையில், கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை, ஷிண்டே தலைமை யிலான அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது,  சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றிய சிவசேனா, அதிகார போதை காரணமாக, பாஜகவை விட்டு விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால், … Read more

பொது இடங்களில் மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது! ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா

சென்னை: சமூக வலைதள தகவல்களை பார்த்து வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்  நடத்தப்பட்டு உள்ளதாகவும், பொது இடங்களில் தனிப்பட்ட, மொழி வாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது என ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறினார். தமிழ்நாட்டில் சமீக நாட்களாக வடமாநிலத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எந்தவித முன்யோசனையும் இன்றி வடமாநிலத்தவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், வடமாநிலத்தவர்கள் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வர்த்தகம் முடங்கி விடும், … Read more

“ரஷ்யா தனது இருப்பை காத்துக்கொள்ள போராடி வருகிறது” ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஆண்டுக்கு ஒருமுறை பேசுவதை வழக்கமாகக் கொண்ட ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டு இந்த கூட்டத்தை நடத்தவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு மற்றும் மக்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதிலளிக்கும் நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more