ஆப்கான் நில நடுக்க பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு
காபூல் ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவித்து உள்ளது. அடுத்தடுத்து 8 முறை ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இவ்வாறு தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களிலிருந்து பலர் அலறியடித்தபடி … Read more