சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய அவர் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார். சேலம் பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் வாசலில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் மு. கருணாநிதி தனது ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையை சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கினார். அதன் நினைவாக சேலம் வரும்போதெல்லாம் மாடர்ன் … Read more

2024 ஏப்ரலில் 5G அலைக்கற்றை ஏலம்..! இந்திய தொலைத்தொடர்பு துறை தகவல்…

டெல்லி: 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கும் என இந்திய தொலைத்தொடர்பு துறை (டிபார்ட்மென்ட் ஆப் டெலிகாம் (DoT) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத்துறை (DoT) மேலும் 5G அலைக்கற்றை ஏலத்தை ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.  மேலும்,  விற்பனைக்கு வைக்கப்படக்கூடிய அலைக்கற்றை அளவை இறுதி செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளதுடன்,  5ஜி சேவைகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுவதால், மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை … Read more

திரிபுராவில் நாளை வாக்குப்பதிவு – ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தொடக்கம்…

அகர்தலா: திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு வாக்குப்பதிவு இயந்திரகள் அனுப்பும்பணி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 60தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி (நாளை) 16-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி மாலை 4மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் … Read more

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது என்று அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், அதற்குள் இணைக்காதவர்கள் இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. ஆதார் எண்ணுடன்  பான் கார்டை  இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 அபராதத்துடன் இணைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு மார்ச் 31-ந்தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 31ந்தேதிக்குள் ஆதார் எண்ணுடன்  இணைக்கப்படாத பான்கார்டுகள் … Read more

சேலம் உள்பட 4மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்துறை மற்றும் மகளிர் சுயஉதவிகுழுக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் 2 நாள் பயணமாக இன்று சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சேலம் ஆட்சியர் அலுவலகத்தில்  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் தொழில் துறை மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி & நாமக்கல் மாவட்டங்களின் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு … Read more

கரூர் அருகே சோகம்: மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி 4 மாணவிகள் உயிரிழப்பு…

கரூர்: கரூர் மாவட்டத்தில் பாயும் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளை மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் … Read more

4 நாட்கள் அனுமதி: மகா சிவராத்திரி அன்று சதுரகிரி மலையில் இரவு தங்க அனுமதி!

விருதுநகர்: பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் (பிப்.18 – பிப்.21) அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,  மகா சிவராத்திரி அன்று மட்டும் சதுரகிரி மலையில் பக்தர்கள் இரவில் தங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவில் அமைந்துள்ள பகுதி சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாக ஐதிகம். … Read more

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி! விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று முன்னதாக இதுபோன்று முழுமையாக டிக்கெட்டுக்கள் விற்றிருந்த நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்று தீர்ந்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், … Read more

ரவுடிகளுடன் சென்று திமுக கவுன்சிலர் தாக்கிய ராணுவ வீரர் உயிரிழப்பு! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

கிருஷ்ணகிரி: திமுக கவுன்சிலர் தனது ஆதரவு ரவுடிகளுடன்  சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திமுக கவுன்சிலர் தலைமறைவாகி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக பிரமுகர்களும், கவுன்சிலர்களின் அடாவடி போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது, தற்போது லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பிலும் வெளிப்பட்டுள்ளது. இந்த … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பணிகளுக்காக மாநிலஅரசு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்4 தேர்வு இரண்டாண்டு கொரோனா பேரிடருக்கு பிறகு  9870  காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு (2022)  ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவது நடைபெற்றது. இந்தத் தேர்வில் 21 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் … Read more