ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்திம் அருகே  ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் மூன்று மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல், ஆம்புலன்சை முந்திக் கொண்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல கிலோ மீட்டர் வரை ஆம்புலன்ஸ்-க்கு வழி விடமால் கார் சென்றுள்ளதை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த காருக்கு அபாரதம் விதித்தனர். … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? இந்திய தூதர் தகவல்

அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? என்று இந்திய தூதர் வீரேந்தர் பால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துருக்கியில் 3000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில், இந்தியர்கள் யாரும் சிக்கி கொண்டிருப்பதாக எந்த தகவலும் வெளியாகவிலை என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 5 நாள் பிரசாரம்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு  தொகுதியில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 5 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  முடிவடைந்து, தற்போது 77 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படஉ ள்ளது. இந்த நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி … Read more

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் அஜித்… லாக்கர்பை நினைவிடத்தில் அஞ்சலி…

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் நடிகர் அஜித் குமார் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள லாக்கர்பை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1988 ம் ஆண்டு 270 பேரை பலி வாங்கிய போயிங் விமான வெடிவிபத்து உலகையே உலுக்கியது. ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பான் ஆம் 103 விமானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இந்த விமானத்தில் பயணம் செய்த 243 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பலியாகினர். … Read more

ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை: மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை:  ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தக் கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 6 வழிச்சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை … Read more

கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறது: பரந்தூர் போராட்டத்தில் திமுக அரசை சாடிய தவாக தலைவர் வேல்முருகன்..

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, போராட்டக்கார்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறது, இரட்டை நிலையை எடுக்கிறது  என விமர்சித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. … Read more

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டி 5ஆண்டுகளில் 102 பேர் பலி!

மும்பை:  கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 102 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த எல்சா (ELSA) பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை காளைகள் முட்டியதில் 81 பார்வையாளர்கள், 21 மாடுபிடி வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு … Read more

மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கடுமையான முறையில் பதில் அளித்தார். திமுக எம்.பி.க்கள் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,  ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் … Read more

விமான நிலையத்துக்கு எதிரான பரந்தூர் 13 கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டியது… தவாக தலைவர் வேல்முருகன் பங்கேற்பு…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பரந்தூர் உள்பட  13 கிராம மக்கள் நடத்தி போராட்டம் இன்று  200வது நாளை எட்டி உள்ளது. இன்றைய போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களை காவல்துறை, அங்கே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதுபோல வேல்முருகனும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி மேலும் 2 கம்பெனி பாதுகாப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட 2 கம்பெனியை சேர்ந்த 180 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இந்த  இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி  முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை, … Read more