நாளை வெளியாகிறது குரூப்-2 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து நாளை பிற்பகல் 12:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க தலைவர் சோமையா தனது எழுத்துப்பூர்வ அறிக்கையுடன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை … Read more

கீழடியில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாயம் … Read more

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டினருக்கும் அனுமதி இல்லை

கொழும்பு இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்குக் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அது ஒரு காலத்தில் இந்திய நாட்டின் பகுதியாக இருந்தது.   இங்கு வருடா வருடம் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவுக்குத் தமிழக மீனவர்கள் சென்று வழிபடுவது வழக்கமாகும்.   அந்த விழாவில் இலங்கை மீனவர்களும் கலந்துக் கொள்வார்கள். கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் மேலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாலும் … Read more

கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கிய மோடி : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பதான்கோட் மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.   தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் நிலையில் பாஜக இங்கு ஆட்சியைப் பிடிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.   பாஜகவுக்காகப் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் என பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்காக … Read more

கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவரான ஏபிவிபிஐச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவரை ஏற்கனவே பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் துறை தலைவராகவும், பேராசிரியராகவும்  இருந்து வருபவர் மருத்துவர் சுப்பையா. இவர் பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) தேசியத் தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஊழியருக்கான நடத்தை … Read more

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என  உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார்.  இத்திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்து உத்தரவு … Read more

‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் விமர்சித்துள்ளார். பள்ளிகளில் அனைவரும் சமம் என்பதை உணர்த்திடவே சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரியாக கடைபிடிக்காத காரணத்தால், தற்போது மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளன.  கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், … Read more

மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை ஓரம் கட்டும் முயற்சியாக,  எதிர்க்கட்சி தலைவர்களை முதலவர்  சந்திரசேகரராவ் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக … Read more

மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்கலாம்! மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு கடிதம்…

டெல்லி: மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆராய மாநிலஅரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 90சதவிகிதம் அளவிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். … Read more