ஹாக் செய்யபட்டது யுஜிசியின் ட்விட்டர் கணக்கு

புதுடெல்லி: யுஜிசியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வருகிறது. அதன் முகப்பு படத்தில் கார்ட்டூன் … Read more

இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

புதுடெல்லி: இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அங்கு முதல் … Read more

4வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் … Read more

09/04/2022: தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன்,  29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 21 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,53,054 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 9 பேருக்கு … Read more

தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே: ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியிலும் படுதோல்வி…

மும்பை: நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும், தோல்வி களை மட்டுமே பெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற 4வது போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. சன் ரைசர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்15-வது சீசன் போட்டிகள் மார்ச் 15ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு, சிஎஸ்கே … Read more

இரும்பு மனிதர் பினராயி விஜயன் – தோழர்களுக்கு செவ்வணக்கம்! கேரள கம்யூனிஸ்டு மாநாட்டில் மலையாளத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்…

கண்ணூர்: “இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்” என கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23ஆவது அகில இந்திய மாநாட்டில் மலையாளத்தில்  உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் முதலில்,  தோழமை உணர்வோடு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பளித்த தோழர்களுக்குச் செவ்வணக்கம் தெரிவித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். … Read more

ஸ்ரீநகர் என்ஐடியில் படித்த மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா உறுதி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஒருசில மாநிலங்களில் மட்டும் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பே கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி.யில் படிக்கும் 24 மாணவர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 24 பேருக்கு … Read more

நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் உள்பட பல்வேறு திட்டங்கள்: சிங்காரச் சென்னை 2.0-க்கு முக்கியத்துவம் கொடுத்த மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அழகுபடுத்தும் வகையில் ஏராளமான நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்பட பல்வேறு செயல்களுக்கான மொபைல் செயலிகளும் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு இன்று தொடங்கியது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற அமர்வில், மேயர் பிரியா ராஜன் 64 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் … Read more

திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான  கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் மற்றும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது  தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 12 வருடங்களுக்கு மேல் ஆன கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்பு … Read more

50டன் எடை கொண்ட 60அடி இரும்பு பாலம் இரவோடு இரவாக திருட்டு! பீகாரில் நடைபெற்ற பலே கொள்ளை சம்பவம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 50 டன் எடை கொண்ட 60 அடி இரும்பு பாலத்தை கொள்ளைக்கூட்டம் ஒன்று இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து சென்றுள்ளது விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் உலகில் அது சம்பந்தமான திருட்டுக்களே சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தையே அலெக்காக பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளை கூட்டத்தினர். இந்த … Read more