வார ராசிபலன்: 1.4.2022 முதல் 7.4.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆஃபீஸருங்களோட ஆதரவும், சலுகைகளும், ஹெல்ப்பும், சப்போர்ட்டும் கெடைக்குங்க. உங்களோட சுய முயற்சியால வீட்ல மகிழ்ச்சி பொங்கும். பழைய முயற்சிகளால புதிய சக்ஸஸ் வரும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். அதிக லாபத்தோட புதிய பணி/ பிசினஸ் வாய்ப்பு வந்து சேரலாம். நண்பர்களுக்கு உதவி செய்து நெகிழ்ச்சியளிப்பீங்க. பெண்களால் நன்மையடைவீங்க. இந்த வாரம் புதன்கிழமை நல்ல நியூஸ் ஒண்ணு வரும். பரபரப்புகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். உற்சாகமான.. ஹாப்பியான .. குதூகலமான வாரம். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. … Read more

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு ஏப்ரல் 15 வரை நீடிப்பு

புதுடெல்லி: சிறப்பு உறுப்பினர் இயக்கத்தை நீடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினர் சேர்க்கைக்கான மார்ச் 31 காலக்கெடுவை ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் உடல் பயன்முறையில் மார்ச் 31 வரை தொடர இருந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. … Read more

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே தெரிவிக்கையில், “இந்தியாவில் காசநோய் பரவும் சுமையைக் குறைக்கும் ஒரு நல்ல தடுப்பூசியை இந்தியா நிச்சயமாகப் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தனர். ஐசிஎம்ஆர் இந்தியாவில் 18 துணை தளங்களில் 3-ம் கட்ட இரட்டை குருட்டு மருந்துப்போலி கட்டுப்பாட்டு சோதனைகளை நடத்தத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில், ICMRNARI … Read more

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் என பலரை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக பதவியேற்ற பின் எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. இன்று பிற்பகல் … Read more

செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் மான்ய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரிபாய்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தணிக்கையில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் 1.35 லட்சம் அபராதமாக வசூல் … Read more

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு

சென்னை: கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75% … Read more

சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு முறைப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700 பகுதிகள் சாலையோர வியாபாரம் அல்லாத பகுதிகளாக அடையாளப்படுத்தி உள்ளது. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 905 விற்பனை மண்டலங்களில் வியாபாரம் செய்ய விரைவில் இ-டெண்டர்கள் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது. மாநகராட்சியின் அனுமதி சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விற்பனை மண்டலங்களில் கடைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். புதிய கடைகள் மற்றும் … Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே! வன்னியர் இடஒதுக்கீடு ரத்து குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர்கள், கட்சியினர் என பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் ராமதாஸ் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே என தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது  என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறிய பல காரணங்களை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து நிராகரித்து … Read more

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின்கட்ரி மற்றும் சோனியா காந்தியை சந்தித்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராக பதவி ஏற்றபிறகு, பல முறை டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்றுதான் முதன்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் ஏப்ரல் 2ந்தேதி திமுக அலுவலகமான அறிவாலயம் திறந்து விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு நேற்று … Read more