தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமானதொரு முற்போக்கான படியாகும்

பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 வருடங்களின் பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுப்பதுடன், குறித்த சட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான உறுதியான பாதுகாப்பை வழங்கும் மிகவும் முற்போக்கான நடவடிக்கையாக அமையும். முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் … Read more

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு: நோயாளிகள் அசௌகரியத்தில்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(07) காலை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளிகள் கடும் அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தாமதித்ததால் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நேர்ந்ததாக அந்தத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை எந்தவிதத்திலும் நியாயமானதல்ல என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க தலைவர் சங்கைக்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கோரிக்கைகளில் சிலவற்றுக்கு தீர்வு வழங்க ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதியர் சார்ந்த பல கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை… அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ தலைமையில் புதிய குழு

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்கு வைத்தே, ஜனாதிபதி அவர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அவர்களது தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும், ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார். சுங்கத் திணைக்களத்தின் … Read more

இலங்கையில் இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 'தமிழ் இனப்படுகொலை' குற்றஞ்சாட்டு மறுப்பு

மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது. கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் … Read more

கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு -கனேடியத் தலைநகரில் அவசரகால நிலை

கனடாவின் ஒட்டாவா நகர முதல்வர் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்துள்ளார். ட்ரக் வண்டி உரிமையாளர்களின் 10 நாள் ஆர்ப்பாட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ட்ரக் வண்டி ஓட்டுனர்கள் தலைநகரின் பல மையப் பகுதிகளை முடக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார். … Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று (07) அலரி மாளிகையில் நடைபெற்றது. அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டன. எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக … Read more

கொவிட் தொற்றுக்குள்ளான உயர் தர  பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு

தற்போது நடைபெறும் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளுக்கு விசேட அறிக்கை ஒன்றை பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார். இதற்கமைவாக இவ்வாறான பரீட்சாத்திகள் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ள வைத்தியசாலை மற்றும் இடை நிலை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும். இந்த மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். தொற்றுக்குள்ளான அனைத்து … Read more

பயிலுனர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவிப்பு

பயிலுனர் பட்டதாரிகளை அரச சேவை, மாகாண சேவை மற்றும்  நிறுவகங்களில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுவரை நிரந்தர நியமனங்கள் கிடைக்கபெறாத பயிலுனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உரிய சேவை நிலையங்களினால் செய்யப்படும் அழைப்புக்களுக்கு இணங்க சேவை நிலையங்களுக்கு பயிலுனர்களை சமூகமளிக்குமாறு செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

5,000 ரூபா கொடுப்பனவுக்கு உரித்தானவர்கள்

நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் மாதாந்த சம்பளம் பெறும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த உத்தியோகத்தர்களுக்கும், நாளாந்த சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என 03/2022 அரசாங்க நிர்வாக சுட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு: 

65 மில்லியன் ரூபா செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின், பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, முதலைக்குடா மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளுக்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினை ,பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று (07) … Read more