75 உதவி செயலாளர்கள் நியமனம்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்கு, அனைத்து பொதுமக்களின் பொறுப்புகளை ஆகக்கூடிய வகையில் நிறைவேற்றுவதே அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார்

.அரச நிர்வாக சேவையில் புதிதாக உதவி செயலாளர்கள் சிலருக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

75 பேருக்கு இந்த நிகழ்வின்போது நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. புதிய அதிகாரிகள் நாட்டின் பல்வேறு நிர்வாக நிறுவனங்களில் சேவைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ராநந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.