மொனராகலை மாவட்டத்தில் செயற்கைக் கால்கள் வழங்கும் சமூக சேவைத் திட்டம்

ஊவா மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் சமூக சேவைகள் இயக்குநரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில், மொனராகலை மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில், கடந்த காலத்தில் பிலிசரண வயோதிப நல இல்லத்தில் குறைந்த வருமானம் உள்ள 40 பேருக்கு செயற்கைக் கால்கள் வழங்கும் சமூக சேவைத் திட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, அந்த நபர்களின் அளவுகளை எடுத்து, அந்த கால்களின் தரத்தை சரிபார்த்து பொருத்தும் பணிகள் அங்கு நடைபெற்றன. இத்திட்டத்தின் முதல் கட்டம், மொனராகலை மாவட்டத்தின் … Read more

பிரதேச செயலக ரீதியாக டெங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசாங்க அதிபர் நடவடிக்கை

தற்போதை மழைக்குப் பின்னரான சூழலில் டெங்குப் பரவலை மிக அதிகமாக காணப்படுவதனால், மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுடன்  இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கேதுவாக, காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களை சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல பிரதேச செயலாளர்களையும் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான … Read more

வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டம்

வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாம்பழ வகை உற்பத்தியாளர்களை ஏற்றுமதி தொழில்முயற்சியாளர்களாக மாற்றுவது உடனடித் தேவை என திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி புத்திக அபேசிங்க சுட்டிக்காட்டினார். அதன்படி விவசாயிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி அதிக விளைச்சலைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக  சட்டத்தரணி எம். ஏ. எல்.   எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்கு இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

தனிமனித சுய ஒழுக்கமின்றி வெளியில் ஒழுக்கத்தைக் காட்டிக்கொள்வதில் பயனில்லை – பிரதமர்

தனிமனித சுய ஒழுக்கமின்றி வெளியில் ஒழுக்கத்தைக் காட்டிக்கொள்வதில் பயனில்லை : சாரணர் இயக்கத்தின் மனப்பாங்கு நாட்டுக்கு மிக அவசியம் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனிமனித சுய ஒழுக்கமின்றி வெளியில் ஒழுக்கத்தைக் காட்டிக்கொள்வதில் பயனில்லை என்றும், சாரணர் இயக்கத்தின் ஒழுக்கமான மனப்பாங்கு நாட்டுக்கு மிக முக்கியமானது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இலங்கை சாரணர் இயக்கத்தினால் அலரிமாலிகையில்; ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசிய சாரணர் விருதுகள் வழங்கும் விழா – 2024’ இல் கலந்து … Read more

இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தளபதி

வழங்கல் பணிநிலை பாடநெறி எண்.10 இன் பட்டமளிப்பு விழா 05 டிசம்பர் 2024 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். வருகை தந்த தளபதியை, இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்.டி. லொகுதொடஹேவா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். நிர்வாகம் மற்றும் வழங்கலில் முதன்மையான தொழில்முறை … Read more

தென்கிழக்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து வருவதனால் நாளை (10)  முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  டிசம்பர் 09ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 டிசம்பர் 08ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில்  நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத் தொகுதி டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு … Read more

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் தினம் தொடர்பான அறிவித்தல்

விவசாயம், கால்நடை வளங்கள். காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக ஒவ்வொரு மாதமும் முதலாவது திங்கட்கிழமை விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் முற்பகல் 9.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை நடாத்தப்படும். அதற்கமைய, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டீ.லால்காந்த அவர்கள், விவசாயம், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் சுருணாரத்ன அவர்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் மருத்துவ … Read more

ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230

ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230 பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை –ஜனாதிபதி தெரிவிப்பு வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபாய் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபாய் சம்பா அரிசியின் மொத்த விலை 235 ரூபா.சில்லறை விலை 240 ரூபா கீறி சம்பா அரிசியின் மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா – அரிசி … Read more

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம்

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம்.*  – தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான  ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவிப்பு  தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான  ஐக்கிய அமெரிக்காவின் … Read more