நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்

அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, இன்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யக்கூடிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள  ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 பெப்ரவரி

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 பெப்ரவரியிலும் விரிவடைந்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 பெப்புருவரியில் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இம்மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை வழங்குநர் விநியோக நேரம் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2022 பெப்புருவரியில் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் … Read more

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சந்தையில் இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு அதிக தேவை

சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை எளிதாக்கி, மேம்படுத்துவதற்காக, தாய்லாந்து இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்பு சந்தைப்படுத்தல் சபை மற்றும் இலங்கையின் தேசிய கைவினை சபை ஆகியவற்றுடன் இணைந்து முதன்முறையாக 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சங்க சந்தையில் இலங்கைத் தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. தாய்லாந்திலுள்ள தூதுவர்கள் தமது வாழ்க்கைத் துணைவர்களுடன் கலந்து கொண்ட இந்நிகழ்வு, தாய் செஞ்சிலுவைச் சங்கத்தால் dpcredcrossbazaar.com ஊடாக ஹைப்ரிட் … Read more

மாலை 4.00 மணிக்குப்பின்னர்  சில இடங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச் 16 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது  நாட்டின் தெற்கு ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.ஊவா மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் களுக்துறை மாவட்டத்திலும் மாலை 4.00 மணிக்குப்பின்னர்  சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய … Read more

அறுபது மருந்து வகைகளின் விலைகளில் திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.   அதி விசேட வர்த்தமானி http://documents.gov.lk/files/egz/2022/3/2271-23_T.pdf

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது… வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

சுவிட்சலாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக விடயங்களை முன் வைத்து, அவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் தெரிவித்தார். வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சவால்களும் இலங்கையும்” என்ற தலைப்பில் … Read more

பசுமை விவசாயத்திற்கான வேலைத்திட்டத்தில் வெற்றி பெறலாம்… – மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்

பெரும் போகத்தில் சேதனப் பசளையை சரியாகப் பயன்படுத்திய விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றுள்ளனர். அதில் ஈடுபடாத விவசாயிகளுக்கும் முறையாக தெளிவுபடுத்தி ஏற்பட்ட குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் பசுமை விவசாயத்துக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் வெற்றி பெறலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று, (15) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. பெரும் போகத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் 48 … Read more

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆலோசனைக் குழு…

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்துள்ளார். 01. பேராசிரியர் எச்.டி.  கருணாரத்ன 02. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த 03. கலாநிதி துஷ்னி வீரகோன் 04. திரு.தம்மிக்க பெரேரா 05. திரு.கிருஷான் பாலேந்திர 06. திரு. அஷ்ரப் ஒமார் 07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய 08. திரு. விஷ் கோவிந்தசாமி 09. திரு. எஸ். ரெங்கநாதன் 10. திரு.ரஞ்சித் பேஜ் 11. திரு. சுரேஷ் … Read more