அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எதிர்காலத்தில் சுமார் 400 அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சில புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ள 133 அரச மற்றும் சட்டரீதியான நிறுவனங்களை எதிர்காலத்தில் இலாபகரமானதாக மாற்றும் வகையில் அவற்றை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. இதனால், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை … Read more

7 பில்லியன் டொலர் கடன் உதவி பெறவுள்ள இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 330 மில்லியன் டொலர்கள் விரிவான கடன் வசதி கிடைத்ததைத் தொடர்ந்து, மேலும் 7 பில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக இலங்கை பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியின் கீழ் இந்தக் கடன்கள் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன்கள் தொடர்பில் அண்மையில் உலக வங்கியின் இலங்கை பணிப்பாளர் சியோ கன்டா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் … Read more

உலக நாடுகளை உலுக்கிய சக்தி வாய்ந்த 10 நிலநடுக்கங்கள்..! வெளியான அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் 10 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் இரு நாடுகளிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 30 நாட்களில் உலகம் முழுவதும் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 10 இடங்களில் பதிவாகிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்  அந்த வகையில் … Read more

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை! ஏற்பட்டுள்ள நிர்க்கதியான நிலை

தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  நிர்க்கதிக்குள்ளான அரச ஊழியர்கள்  இது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற நிலையிலேயே இது இடம்பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த அரச ஊழியர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.  மேலும்,  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இதனால் சம்பளம் இன்றி உள்ளனர்.  அவர்கள் என்ன  … Read more

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடனை மறுசீரமைக்காவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  அதனை செலுத்துவதில் சிரமம் இருப்பதால் கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும்  அவர் குறிப்பிட்டார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று  இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், எங்களால் அப்படியே செலுத்த முடியாததால், எங்களுக்கு கடன் வழங்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் … Read more

இலங்கை தமிழ் பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர் அங்கீகாரம்(Video)

கடந்த வரும் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது தனக்கு கிடைத்ததாக இலங்கை ஊடகத்துறையில் பல வருடகாலமாக மிளிர்ந்து வரும் மற்றும் இலங்கை திரைப்படத் துறையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.  எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியல் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுனாமி திரைப்படத்திற்காக குறித்த விருது தனக்கு கிடைத்ததாகவும், அந்த விருதினை இந்த வருடம் இலங்கையில் வைத்து அதன் ஒழுங்கமைப்பாளர்கள் எங்களிடம் … Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும், கொள்வனவு விலை … Read more

யுத்தத்தின் போது விமானியாக செயற்பட்டவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! சபையில் அம்பலமான தகவல்கள் (Live)

தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த உள்ளிட்ட 3 இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த எந்தவொரு விமானப்படைத் தளத்திற்குள்ளும் நுழைவதற்கும், விமானப்படை நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் … Read more

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை விபரம் பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா … Read more

அம்மா, அப்பா மன்னித்து விடுங்கள்… இளம் பெண்ணின் விபரீத முடிவு

புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளம் வைத்தியர் ஒருவரே ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது. அவர் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்து. அந்தக் கடிதத்தில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். குறித்த இளம் பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் … Read more