"களத்துல லிங்கம்தான் பெரிய ஆளு"- Jio Hotstar நிகழ்ச்சியில் வெளியான விகடனின் 'லிங்கம்' புரொமோ

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய ‘South Unbound’ நிகழ்ச்சி நேற்று (டிச.10) நடைபெற்றது. பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘South Unbound’ நிகழ்ச்சியில் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்… தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் தொகுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஆண்டின் லைன் … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். லட்சுமண் குமார் என்ற அந்த பேராசிரியர், தன்னிடம் இருந்த மாணவியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி, தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார். ஏற்கனவே அந்த மாணவியை அந்த பேராசிரியர் பாலியல் வன்முறை … Read more

“கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' – பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் மாணவர்களின் நலன் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். பள்ளிக்கு ஊர்வலமாக சென்ற ம.க.ஸ்டாலின் … Read more

Bigg Boss: "பிக் பாஸ் டிராமா கிடையாது!" – ஒரே மேடையில் மூன்று மொழியின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்!

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் ‘South Unbound’ என்ற நிகழ்வை நேற்றைய தினம் நடத்தியது. பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். Jio Hotstar ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஆண்டின் லைன் அப் அப்டேட்களையும் இந்த நிகழ்வில் அறிவித்தார்கள். நிகழ்வில் இறுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் … Read more

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்‌ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி!

சென்னையில் ‘JioHotstar South Unbound’ நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், ‘JioHotstar’ நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘காக்கமுட்டை’, ‘கடைசி விவசாயி’ – மணிகண்டன் BB Tamil 9: “ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது … Read more

புத்தகத்தை விட மீன் வலை நெருக்கமானது ஏன்? – மெரினா மணலில் முடிக்காத வீட்டுப் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் மாலை நேரம். வானம் மெல்ல கருக்கத் தொடங்கியது. சென்னை மெரினாவில் கடல் அலையின் சீற்றம் மட்டும் சற்றே அதிகமாக இருந்தது. சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், மீன் உணவு வகைகளின் வாசம், கடல் அலைகளின் சத்தம் என அந்தச் சூழல் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது. … Read more

"சங்கர் ஆணவக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கல" – திமுக அரசுக்கு எதிராகச் சீறும் கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இன்று (09.12.25) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை – கௌசல்யா அவர் பேசியதாவது, “எங்களுடைய சம்பவம் நடந்தபோது கலைஞர் கருணாநிதி, ‘தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த தகவல் வந்துள்ளது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடைமுறைகளை … Read more

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் தனது மனைவியையும், குழந்தையையும் சதீஷ்குமார் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், 366-ன் கீழ் சதீஷ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாலாட்டின்புதூர் இப்புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுடன் திருப்பூருக்குச் சென்றனர். அவிநாசிபாளையம் … Read more

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியில் கட்டிகொடுத்திருக்க வேண்டிய வீடுகளை ரூ. 6,43,000 பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியிருந்த தகவல் பாதிப்படைந்த மக்கள் தலையில் இடியாக வந்து விழுந்தது. மொத்தமாக இவ்வளவு பணம் கட்ட முடியாது என்றும் தவணை முறையில் கட்டுவதாகவும் 2022-ஆம் ஆண்டு … Read more