Cinema Roundup 2025 கடந்தாண்டு வெளியான படங்களில் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை?

கடந்தாண்டு வெளியான படங்களில் எவை ஆனந்த விகடன் விமர்சனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் என்பதை பார்ப்போமா… குடும்பஸ்தன்: அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்பக் கதையானாலும் திரைக்கதையில் அதை அலுப்பூட்டாமல் புதுமையாகப் பரிமாறியிருந்தார் இயக்குநர். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது. பாட்டில் ராதா: குரு சோமசுந்தரம் … Read more

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். அப்பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அப்பெண்ணிடம் நாங்கள் உங்களை பத்திரமாக வீட்டில் விட்டு விடுகிறோம் என்று காரில் இருந்த இரண்டு பேரும் தெரிவித்தனர். அவர்களின் வார்த்தையை நம்பி அப்பெண் காரில் ஏறினார். ஆனால் … Read more

சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? – மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன?

கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்! தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது. அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது … Read more

திருச்செந்தூர் கோயிலுக்குள் தவெக-விற்கு அரோகரா கோஷம் ; கோயிலா… பிரசார இடமா?- பக்தர்கள் ஆதங்கம்!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்தது. ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? என, அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. விஜய் படத்தை காட்டிப் பேசும் ரசிகர் இது பக்தர்களை … Read more

ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். க்ரைம் அந்த வகையில் இயக்குநர் பேரரசு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். “திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான். … Read more

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்… 'திருத்திய' போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும்  முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீஸார் தேடிப் பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில்  நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் … Read more

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கோவை கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவர்கள் இருவரும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்குச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த இரண்டு நபர்கள், வட மாநில இளைஞர்களிடம் தமிழில் ஏதோ கேட்டுள்ளனர். தங்களுக்குப் புரியாததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சைகை மூலம் விளக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 2 பேர் கொண்ட கும்பல், … Read more

BB Tamil 9: "ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான் அரோரா" – விஜே பார்வதி சாடல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் அரோரா குறித்து சாண்ட்ராவிடம் பார்வதி பேசிக்கொண்டிருக்கிறார். “எனக்கு அரோரா இன்னொரு கனி மாதிரிதான் தெரியுது. பேசுறதுல … Read more