காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்!
கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. ஒருகாலத்தில் அவை செல்வங்களைச் சேர்த்துவைக்கும் பண்டாரங்கள். கல்வி கற்றுத்தரும் கல்விச் சாலைகள். இயற்கைப் பேரிடர்களின்போது மக்களுக்குப் புகலிடம். சில ஆலயங்கள் மருத்துவச் சாலைகளாகவும் விளங்கின. அவற்றை ஆதுரச் சாலைகள் என்று போற்றுகின்றன நம் மரபு சார் நூல்கள். அப்படி ஓர் ஆலயம்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள ‘பழைய சீவரம்’ என்னும் தலத்திலிருந்து பாலாற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் … Read more