நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?
நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார். சரவணபாபு இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும … Read more