சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது … Read more

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' – அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சியின் போது 99 ஆண்டுகள், பிபிடிசி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகைக்காலம் வரும் 2029-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாஞ்சோலை வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்டம் இதற்கக அந்த தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் பணிபுரிந்து வசித்து … Read more

“ரூ.1,020 கோடி ஊழல்; DGP-க்கு துல்லியமாக ஆதாரங்களை கொடுத்த ED'' – நேரு துறை குறித்து அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கோயம்புத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 12) பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கே.என். நேரு சார்ந்த தொழில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். குறிப்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை (ED) சுட்டிக்காட்டியது போல, 88 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதைப் பொறுப்பாக DGP அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் 150 விஷயங்களைத் … Read more

தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album

தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு … Read more

காங்கிரஸ்: “ராகுல் – பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' – பாஜக சாடல்

“காங்கிரஸ் கட்சிக்குள் ‘ராகுல் அணி’ மற்றும் ‘பிரியங்கா அணி’ இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி! ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், `ட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்கக் கோரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதமே இதற்கு காரணம். அந்த கடிதத்தில், பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் … Read more

கேரளா: நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த வழக்கில் நடிகையின் கார் டிரைவரான பல்சர் சுனி என்கிற சுனில் குமார் கைது செய்யப்பட்டார். பல்சர் … Read more

“அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' – பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தூணில் … Read more

Rajinikanth: “படையப்பா 2 – நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' – லதா ரஜினிகாந்த் அப்டேட்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று, அவரது சூப்பர் ஹிட் படமான படையப்பா வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடிவரும் சூழலில் திரைத்துறையினரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Latha Rajinikanth பேச்சு இன்று படையப்பா படம் பார்க்க வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், “இந்த 40, 50 வருஷமும் எங்களோட டிராவல் பண்ண ஃபிலிம் இண்டஸ்ட்ரி, பப்ளிக், ஃபேன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. படையப்பா ரஜினிகாந்த் இது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். ரஜினிகாந்த்தின் 25-வது ஆண்டில் … Read more

What To Watch: படையப்பா, காந்தா, ஆரோமலே – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்! மகாசேனா (தமிழ்): இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள ‘மகாசேனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படையப்பா (ரீ-ரிலீஸ்): ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள். … Read more