`இங்கே யானைகள்தான் வாழ முடியுமா… எறும்பு வாழ முடியாதா?' – வசந்த பாலன் ஆதங்கம்

ஓடிடி தளங்கள் மீதான ஆதங்கம் பற்றியும், சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவிப்பது பற்றியும் இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் சிறு குறிப்பாக எழுதியிருந்தார். அவரிடம் இது பற்றியும் சற்று விரிவாகப் பேசினோம். வசந்த பாலன், “பொதுவாக கோவிட்க்குப் பிறகு சின்ன பட்ஜெட் படங்களுக்கான திரையரங்குகள் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களிலும் பெரிய படத்தை வெளியிடும் போக்கு ஆரம்பித்துவிட்டது. அதனால் சின்ன படங்களுக்கான இடம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்து வருகிறது. முன்பு தீபாவளி அல்லது ஒரு … Read more

`துப்பாக்கி திருப்புமுனை' – எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.) ‘வாவ்’ வியூகம் – 02எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பல ரகங்கள். ஆனால், சில நேரங்களில் ‘அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத் தான் இருக்குது’ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழும் சில சம்பவங்கள் ஒரு கட்சிக்கு லாபகரமாக மாறும். அதுவும் குறிப்பாக … Read more

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்!

புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில்தான் கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. சேலம் கரபுரநாத சுவாமி திருக்கோயில் ராவணனின் சகோதரன் கரதூசனன், ஈச்னை நோக்கித் தவம் செய்தான். அவன் கடுமையான … Read more

Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி… தவறவிடக்கூடாத 5 நூல்கள்!

பராசக்தி தடை பராசக்தி தடை – கடற்கரய் மத்தவிலாச அங்கதம்  பராசக்தி என்றவுடன் இயல்பாகவே ஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.  இந்த நூலில் இதுவரை பொதுவெளியில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள், கேலிச்சித்திரங்கள், கடிதங்கள், விளம்பரங்கள் என ‘பராசக்தி’ திரைப்படம் குறித்த முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது இன்னும் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. 1,120 பக்கங்களில் ஆய்வு நூலாக … Read more

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (நண்டு) வறுவல்! – வீட்டிலேயே செய்வது எப்படி?

கத்திரிக்காய் (நண்டு) வறுவல் தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்) பூண்டு – 4 பற்கள் கறிவேப்பிலை – சிறிதளவு சீரகத்தூள் – 2 டீஸ்பூன் சோம்புத்தூள் – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் – … Read more

விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிந்த போது தூத்துக்குடியில் தனது பணியை தொடர்ந்தார். முதல் நிலை காவலர், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர், பதவி உயர்வில் தற்போது 40 ஆண்டு கால அனுபவத்துடன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து … Read more

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' – இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் வராது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்கிறார் சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் துர்கா தேவி. uncontrolled diabetes “கடந்த 8 ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் ஒருவர், நெஞ்சு … Read more

Valentino Garavani: ஃபேஷன் உலகமே அஞ்சலி செலுத்தும் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி – யார் இவர்?

உலக ஃபேஷன் துறையில் பல வருடங்களாக சாதனை படைத்து, ‘வாலென்டினோ ரெட்’ எனும் தனிச்சின்னத்தால் புகழின் உச்சத்தை அடைந்த உலக ஃபேஷன் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி, தனது 93-வது வயதில் ரோமில் உள்ள தனது வீட்டில் காலமானார். யார் இந்த வாலென்டினோ? இளவரசி டயானாவிலிருந்து இன்றைய இளம் ஹாலிவுட் நட்சத்திரம் சென்டயா வரை, உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு அதிகாரப்பூர்வ ஃபேஷன் டிசைனராக இருந்தவர் வாலென்டினோ. Oscars, Cannes Film Festival, Met Gala போன்ற உலக கவனத்தை … Read more

`இனி என் தலைவர் நிதின் நபின்' எனக் கூறும் பிரதமர் மோடி; 45வது வயதில் பாஜக தலைவர்! – யார் இவர்?

பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவராக இன்று பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இப்பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.கவிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி நிதின் நபின் தான் எனது தலைவர். நான் சாதாரண கட்சி தொண்டன்”என்று தெரிவித்தார். 45 வயதில் … Read more