'7 பிள்ளைகள், 20 பேரன்-பேத்திகள், 24 பூட்டன்–பூட்டிகள்'- 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய கிருஷ்ணம்மாள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி – கிருஷ்ணம்மாள். இத்தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள். 7 பிள்ளைகள் மூலமாக மொத்தம் 20 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி மொத்தம் 24 பூட்டன் – பூட்டிகள் உள்ளனர். இவர்கள் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி, உடல்நலக் குறைவினால் இறந்துவிட்டார். கேக் வெட்டும் கிருஷ்ணம்மாள் பாட்டி இந்த … Read more

Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், ’ஷேர் மார்க்கெட்டிங்’ மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிய அந்த இளைஞர், ஆர்வத்துடன் அந்த லிங்கினை க்ளிக் செய்து அதில் இணைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து டெலிகிராம் மூலமாக … Read more

"விஜய் சாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, ஆனால்.! – இயக்குநர் சுதா கொங்கரா

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக இருந்தது. அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த ‘பராசக்தி’ திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ‘பராசக்தி’ படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியாகவில்லை. பராசக்தி இந்நிலையில் விஜய் குறித்து சுதா கொங்கரா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. … Read more

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நீர்காத்த ஐயனார் கோயில் : உறவுப் பிரச்னைகள் தீர்க்கும் தலம்!

தமிழக கிராமங்கள் தோறும் எழுந்தருளி மக்களைக்காக்கும் தெய்வமாகத் திகழ்பவர் ஐயனார். கம்பீரமான அவர் தோற்றமே நம்மை தைரியப்படுத்தி வாழவைக்கும். அப்படி ஐயனார் எழுந்தருளியிருக்கும் தலங்களில் மிகவும் முக்கியமான தலங்கள் சில உண்டு. அப்படிப்பட்ட தலம்தான் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ள நீர்காத்த ஐயனார் கோயில். இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜராஜ சோழன் கட்டியது என்ற ஒரு தகவலும் உள்ளது. 13-ம் நூற்றாண்டில் … Read more

"என் மகள் கட்டாயப்படுத்தினார்" – முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் வந்திருந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது முன்னாள் மனைவி கிரண் ராவ், மகள் இராகான், மருமகன் நுபூர், மகன் ஜுனைத் கான், ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். ஆமீர் கான், இரா கான், … Read more

BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்

கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். BB Tamil 9 பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். எவிக்‌ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், … Read more

தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! – கவனிப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கட்டடத்திற்கு தர சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியானது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 8 மாதங்களாக இயங்கி வந்தது. கோயில் விழா நடத்துதல் போன்ற காரணங்களால் பள்ளியானது … Read more

தங்கம், வெள்ளி விலை இனி சரிவுக்கு வருகிறதா? முதலீட்டில் கவனம் தேவையா? – நிபுணர் கருத்து

தங்கம், வெள்ளி விலை நாம் யாரும் நினைத்துப் பார்த்திராத உயரத்தை 13 மாதங்களில் கண்டுள்ளது. இந்த ஆண்டும் அது தொடருமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “தங்கமும், வெள்ளியும் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறது. காப்பரும் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. தற்போது தங்கம், வெள்ளியில் அதிக நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. அதனால், இது டிரேடிங்கிற்கான ஏற்ற நேரம். நீண்ட கால முதலீடு என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தின் விலை இன்னமும் உயரலாம் என்று உலகப் … Read more