இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் – மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் … Read more

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கொதுமுடி தொழிலாளர்களைத் தங்கவைக்க தோட்ட உரிமையாளர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் பழங்கால கட்டடங்களில் தங்கியபடியே அந்தந்த உரிமையாளர்களின் தோட்டங்களில் கூலி வேலை செய்து வாழ்வைக் கழித்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் கழிவறை இல்லை என்பதால் பெண்களும், ஆண்களும் சுமார் … Read more

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் – சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 07.01.2026-ம் தேதி மாலத்திரி வேலைக்கு சென்ற பிறகு சுஜாதா வீட்டிலிருந்து துணிகளை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஜாக்கெட் தைக்க சுஜாதாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான திருவல்லிக்கேணியைச் சேர்ந் ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர் சுஜாதா வீட்டுக்கு வந்தார். கைது இதையடுத்து போலீஸார், சம்பவம் நடக்கும் போது அங்கிருந்த … Read more

ஜனநாயகன்: “சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம்" – தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறாது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ‘ஜனாநாயகன்’ திரைப்படத்திற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் … Read more

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் – சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை … Read more

ஜன நாயகன்: “வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம்" – இயக்குநர் மாரிசெல்வராஜ்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக … Read more

கனவுகளை நிஜமாக்கும் தையல் கலை: சிந்துவின் கதை!

சிந்துவின் பயணம்…. தையல் பயிற்சி எவ்வாறு ஒரு சாதாரண இல்லத்தரசியை தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்ணாக மாற்றியது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஆரம்பகால போராட்டங்களும் கனவுகளும் ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த 37 வயதான இல்லத்தரசி எஸ்.சிந்து, தனது கணவர் வாகனம் ஓட்டி ஈட்டி வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் சமாளிக்க நீண்டகாலமாகப் போராடி வந்தார். அவருக்கு தையல் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தாலும், அதை ஒரு நிலையான வருமானமாக மாற்றுவதற்கான முறையான … Read more

ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' – இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக … Read more

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' – விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும். சரத்குமார் விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  எனக்கும் ஆசை உள்ளது  … Read more

ஜனநாயகன்: “திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை" – கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணா வெளியிட்ட வீடியோவில் கூட, “அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். ஜனநாயகன் இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். … Read more