"சாவுற வரைக்குமா சார்?" – 'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவல் வாசிப்பனுபவம்

ஐங்கரநேசன்“வலி நிறைந்த இந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி வாழ்வை நடத்துகிறீர்கள்.வாழ்வே வலி நிறைந்ததுதான் என்று புரிந்து கொண்டால் எந்தப் பயணமும் சிரமமில்லை” கல்வி என்பது மட்டும் ஏழைகளுக்கு எட்டாக்கனியல்ல.. மருத்துவமும் தான். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரும் நோய் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதை பார்த்திருக்கிறோம். உடல் ஒன்றையே முதலீடாய் வைத்திருக்கும் ஏழைகளுக்கு உடல் நலமின்மை, சிகிச்சை எல்லாம் பெரும் நெருக்கடிகள். அவசர சிகிச்சை அறையின் வெளியில் இருப்போரை பார்த்திருக்கிறீர்களா.. துக்கம் தோய்ந்த முகத்துடன் ஒருவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்.. … Read more

சென்னை: சைக்கிளில் 9 கி.மீ தூரம் ரோந்து சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி – அதிகாலையில் ஆடிப்போன போலீஸார்

வடசென்னை இணை கமிஷனரான ஐபிஎஸ் அதிகாரி ரம்யாபாரதி், இரவு நேர ரோந்து பணியில் போலீஸார் என்ன செய்கிறார்கள், என்பதை தெரிந்து கொள்ள திட்டமிட்டார். போலீஸ் வாகனத்தில் சென்றால் இரவு பணி போலீஸார் அலார்ட்டாக வாய்ப்புள்ளது எனக்கருதிய அவர், சைக்கிளில் ரோந்துப் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அதோடு, சைரன் வைத்த போலீஸ் வாகனத்தில் சென்றால் இரவு நேர சென்னை எப்படியிருக்கிறது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியாது என்று கருதிய இணை கமிஷனர் ரம்யாபாரதி, சைக்கிளில் ரோந்து பணியைத் … Read more

700 கார்கள், 58 விமானங்கள், 6 மாடி சொகுசுப் படகு… வியக்க வைக்கும் புதினின் சொத்து மதிப்பு!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, ரஷ்யா விடாமல் தாக்கி வருகிறது. உக்ரைனும் ஈடுகொடுத்து தாக்கி வருகிறது. இந்தப் போரின் காரணமாக உலகளவில் தற்சமயம் அனைவரும் ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகளை உற்று கவனித்து வருகின்றனர். புதின் இந்த நிலையில், `ஹெர்மிட்டேஜ் கேபிடல் மேனேஜ்மெண்ட்’ என்ற … Read more

`ஆந்திராவிலிருந்து சப்ளை; எஸ்கார்ட் டிஸைனில் கடத்தல்!' – திருச்சியில் சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்

`ஆந்திராவிலிருந்து சேலம், திருச்சி வழியாக காரில் கஞ்சா கடத்தி வருகிறார்கள்’ என்ற ரகசியத் தகவல், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவி எஸ்.பி ரோகித்நாதனுக்கு கிடைத்திருக்கிறது. அதையடுத்து அந்தத் தகவல் திருச்சி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி (பொ) பரத் சீனிவாஸூக்கு சொல்லப்பட்டு அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தல் கும்பல் தப்பிவிடக் கூடாதென டி.எஸ்.பி பரத் சீனிவாஸ் தலைமையிலான போலீஸார் திருச்சி சமயபுரம் டோல் பிளாசாவில் நேற்று அதிகாலை முதல் தீவிர வாகன சோதனை நடத்தி … Read more

RRR: பிரமாண்டமான மேக்கிங்; பெரிய பட்ஜெட்; இந்தப் படங்களைப் பாத்துருக்கீங்களா! |Photo Story

பாஜிராவ் மஸ்தானி மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வாக இருந்த பாஜிராவ், வேறு மதபெண்ணான மஸ்தானியைக் காதலிக்கிறார். 18-ம் நூற்றாண்டு கதையை விஷுவலாகவும் ஸ்ட்ராங்காக சொல்லிய இந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார். பானிபட் மராத்திய ஆட்சியாளர்களுக்கும் ஆப்கன் படைகளுக்கும் இடையே நடந்த பானிபட் போரை மையமாக வைத்து அர்ஜுன் கபூர், கிர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடிக்க உருவான படம் ‘பானிபட்’ 2019-ல் வெளியானது. பத்மாவத் சஞ்சாய் லீலா பன்சாலி இயக்கிய படம். ராணி பத்மாவதி, அவரின் கணவர் … Read more

திருமண நிதியுதவித் திட்டம் `டு' உயர் கல்வி உறுதித் திட்டம் – திமுக அரசு தரப்பு விளக்கம் என்ன?

தாலிக்குத் தங்கம் திட்டம்: தமிழக அரசு சார்பில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டம் மிகவும் முதன்மையானது. இந்தத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்குத் தங்கமும் சேர்த்து தரப்படும். பெண்களின் கல்வித் தகுதியை வைத்து அவர்களுக்கான நிதி உதவி செய்யப்படும். தாலிக்குத் தங்கம் இந்த திட்டத்தில் இரண்டு வகையான நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று, பத்தாவது … Read more

“சீனா ரஷ்யாவுக்கு உதவினால்..!" – எச்சரிக்கும் ஜோ பைடன்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7ன் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 அமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜி-7 நாடுகளின் தலைவர்களுடனான உரையாடல்கள் முடிவடைந்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் வழங்குவதாக வெளியான செய்திகள் குறித்து … Read more

`கடன் தர மறுத்த பெண் குத்திக்கொலை!' – 9 ஆண்டுகளுக்குப் பிறகு லாரி டிரைவருக்கு 3 ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் மாவட்டம் வாணி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். கோழிக்கறிக்கடை நடத்திவரும் இவரின் மனைவி பெயர் சபிதாபானு (52). இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம், சிவஞானபுரம் புதுப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவரான முகமது அரபுதீன் என்ற ரபீக் (33), கடந்த 2013 ஜூன் மாதம் தன் பெரியம்மா உறவு முறையுள்ள சபிதாபானுவிடம் தொழில் தொடங்க பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சபினாபானு மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. … Read more

`ஒன்லி வெஜ் முதல் பயோ கழிவறை வரை!' – அரசுப் பேருந்துகளை பயணவழி உணவகங்களில் நிறுத்த புதிய நிபந்தனைகள்

அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பலர், பயணத்தின்போது சாப்பிடுவதற்காக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில், உணவு, கழிப்பிட வசதி, விலை போன்றவற்றைக் குறித்துப் பல குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படும் இதுபோன்ற உணவகங்களுக்கான புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. என்னென்ன நிபந்தனைகள் என்பதைப் பின்வருமாறு காணலாம், அரசுப் பேருந்து உணவகங்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட … Read more

30 நாள்களாக ரஷ்யாவைத் தாக்குப் பிடிக்கும் உக்ரைன்! – என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 30-வது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது ரஷ்யா. வலிமையான ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து, விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டுவருகிறது உக்ரைன். `மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, வலிமை பெற்ற ரஷ்யப் படைகளால் இத்தனை நாள்களுக்கு பின்பும் கட்டுக்குள் கொண்டு வர முடியாதது ஏன்?’ என்ற விவாதங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் – ரஷ்யா … Read more