உணவில் புழு; புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு – உணவக உரிமையாளரை எச்சரித்த உணவுப் பாதுகாப்புத்துறை!

சேலம் மாநகரில் உள்ள பிரியாணிக்கடை ஒன்றில் தால்ச்சாவில் புழு இருந்ததாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் அனுப்ப, உணவுப்பாதுகாப்புத்துறையினர் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், புகார் சொன்னவர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையிலடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மருத்துவர்களும், ஒரு மருத்துவ மாணவரும் அடக்கம். சேலம் திருவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ஆதம் பாக்ஷா. இவர் ஏ.எம்.பிரியாணி எனும் பெயரில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் வைத்துள்ளார். இவரது கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, … Read more

ஸ்டாலினின் தனி விமானப் பயண சர்ச்சை – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டும், ஆளும் தரப்பு விளக்கமும்!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக, புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துபாய் வர்த்தக கண்காட்சி முடியும் தறுவாயில் அங்கு சென்றது ஏன்?” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வும் இதே விமர்சனத்தை முதல்வர் ஸ்டாலினின் பயணம் குறித்து முன் வைத்திருக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் … Read more

வங்கி லாக்கர் அறையில் சிக்கிய 89 வயது முதியவர்; 18 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு; என்ன நடந்தது?

ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸில் வசித்து வரும் 89 வயதான வி. கிருஷ்ணா ரெட்டி என்பவர், மார்ச் 28-ம் தேதி திங்கட்கிழமை அதே பகுதியிலுள்ள யூனியன் பேங்க்கிற்கு 4.20 மணியளவில் சென்றுள்ளார். அங்கே அவர் லாக்கர் அறையில் இருந்தபோது வங்கி அதிகாரி அவர் இருப்பது தெரியாமல் அறையைப் பூட்டியுள்ளார். Old People (Representational Image) வெளியே சென்ற முதியவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், வீட்டில் அவரை தேடியுள்ளனர். முதியவர் காணாமல் போன தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு … Read more

`3-வது காலாண்டில் மத்திய அரசின் கடன் ₹128.41 லட்சம் கோடியாக உயர்வு!' – நிதி அமைச்சகம் தகவல்

நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டு முடிவில் மத்திய அரசின் கடன்கள் ₹ 128.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அரசின் மொத்த கடன்கள், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ₹ 125.71 லட்சம் கோடியிலிருந்து 2.15 சதவிகிதம் அதிகரித்து ₹ 128.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிட்டுள்ளது. கடன் குறுகிய காலத் தேவைக்கு ஏற்ற கடன் ஃபண்டுகள்..! 2021 செப்டம்பர் மாத இறுதியில் 91.48 சதவிகிதத்திலிருந்து 2021 டிசம்பர் … Read more

“ஜனநாயகத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்!" – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். ஆளுநா் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவுடன் கைகுலுக்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. பிரதமருடன் யோகி ஆதித்யநாத் இதையடுத்து, சட்டப்பேரவையில் பேசிய யோகி ஆதித்யநாத், “இந்த நாட்டில் எதிர்மறையான விஷயங்களுக்கு இடமில்லை. நேர்மறை எண்ணங்களைத் தூண்டி, முற்போக்கான சிந்தனைகளைப் … Read more

பலவருடக் காத்திருப்பு; முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் – வேளாண் படிப்பில் சேர்ந்த பழங்குடி மாணவன்!

அது 2019-ம் ஆண்டு. கால்நடை மருத்துவம் மற்றும் வேளாண்மை பட்டப் படிப்பு ஆகிய இரண்டுக்கும் விண்ணப்பித்துவிட்டு, கல்லூரிப் படிப்பின் வாசத்தையே அறிந்திராத கிராமத்திலிருந்து முதல் ஆளாய் கல்லூரிக்குச் செல்லும் கனவில் இருந்தான் சந்திரன். ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒரு பழங்குடியின கிராமமான சுண்டைப்போடு தான் சந்திரனின் ஊர். தந்தை உடுமுட்டி. தாய் பசுவி. இவர்களுக்குப் பிறந்த 11 குழந்தைகளில், சந்திரன் 5-வது ஆள். எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட, தொழிற்பாடப் … Read more

சிவகார்த்திகேயன் – ஞானவேல்ராஜா சம்பள பாக்கி விவகாரம்; நடந்தது என்ன?

நாலு கோடி சம்பள பாக்கியைத் தரக்கோரி தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் K.E ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் எம்.ராஜேஷின் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்திற்காக சிவாவுக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.15 கோடி என்றும், ஆனால் அவருக்கு ரூ.11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மீதி சம்பள பாக்கியையும் அதற்காக டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் சிவாவின் … Read more

வில் ஸ்மித் மனைவிக்கு ஏற்பட்டுள்ள `Alopecia' குறைபாடு; ஏன் ஏற்படுகிறது? தீர்வு என்ன?

`மென் இன் ப்ளாக்’ திரைப்படம் மூலம் நமக்குப் பரிச்சயமான ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகராகத் திகழும் இவர், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் `கிங் ரிச்சர்டு’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கட் ஸ்மித்தின் முடி உதிர்ந்த தலை குறித்து கேலி செய்யும் விதத்தில் பேசியிருக்கிறார். … Read more

ஆப்கானிஸ்தான்: `தாடி எடுத்தால் அலுவலகத்துக்குள் அனுமதி இல்லை!' – தாலிபன் அரசு புதிய நிபந்தனை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க ராணுவம் வெளியேறியதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல்வேறு சவால்களை ஆப்கனிஸ்தான் சந்தித்து வருகிறது. அதிலும், பெண்களுக்கு எதிராக தாலிபன்கள் விதித்துவரும் நிபந்தனைகளால் ஆப்கனிஸ்தான் மக்கள் தாலிபன்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தாலிபன்கள், பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்காததற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐ.நா குரல்கொடுத்து வருகிறது. மேலும், பெண்கள் விமானத்தில் தனியாக பயணிக்கவும் தாலிபன் அரசு தடைவிதித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் தாலிபன் … Read more

ஓடும்போதே தீப்பிடித்த கார்; தீக்காயங்களுடன் உயிர்தப்பிய குடும்பத்தினர்! – திருச்சியில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் நத்தம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படைவீரராக வேலை பார்த்து வருகிறார். ராகேஷ், அவரின் 2 குழந்தைகள் உட்பட 6 பேருடன் திருப்பதிக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். இன்று காலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பி.கே அகரம் பகுதி அருகே கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென காரில் இருந்து புகை வரத் தொடங்கியிருக்கிறது. அதனைப் பார்த்து பதறிப்போனவர்கள், காரை ஓரம்கட்டி … Read more