“ரஷ்யாவின் அச்சுறுத்தல் இன்னும் முடிந்துவிடவில்லை!" – எச்சரிக்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரின் 34வது நாளான நேற்று, துருக்கி இஸ்தான்புல்லில் ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை குழுக்கள் போர்நிறுத்தம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது, துருக்கி அதிபர் எர்டோகன், “இரு தரப்பிலும் நியாயம் உள்ளது. உலகமே உங்களிடமிருந்து வரும் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, “பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், உடன்பாடு மற்றும் ஒப்பந்தத்தின் இறுதி இலக்கை அடைவதற்கும், கீவ் மற்றும் செர்னிகிவ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாகக் … Read more

“உக்ரேனியர்கள் போரில் நிறைய கற்றுக்கொண்டனர்; தேவை உறுதியான முடிவு"- ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 35-வது நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுக்கள், தங்களின் அமைதி பேச்சுவார்த்தையைத் துருக்கி நகரமான இஸ்தான்புல்லில் நேற்று நடத்தினர். ஏற்கெனவே ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், இருதரப்பினரும் எதிர்பார்த்த முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததால், மீண்டும் 5 முறையாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் – ரஷ்யா போர் அதைத்தொடர்ந்து ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின்(Alexander Fomin), … Read more

`அவர் விஜய் ரசிகர்தான்!'; KGF இயக்குநர் பிரசாந்த் நீல்லின் பதிலுக்கு நெட்டிசன்களின் கமென்ட்!

இந்த வருடத்தின் பிரமாண்டமான இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைபப்டம் ஏப்ரல் 13-ம் தேதியும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ‘KGF-2’ படம் ஏப்ரல் 14-ம் தேதியும் வெளியாகிறது. இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது வசூலில் எந்தவிதப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கிவிட்டது. இதனை இரண்டு படக்குழுவும் சாமர்த்தியமாக கையாண்டு வருகிறார்கள். நடிகர் யஷ் பத்திரிக்கையாளர் … Read more

பென்ஸ், மினி கூப்பர் – ஆல்யாவிற்கு கார்களாக பரிசளிக்கும் சஞ்சீவ்… வைரலான புகைப்படங்கள்!

‘ராஜா ராணி’ தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமான ஜோடி ஆல்யா – சஞ்சீவ். இந்தத் தொடரில் நடிக்கும்போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆல்யா – சஞ்சீவ் ஆல்யாவிற்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் முதன்முறையாகக் கர்ப்பமாக இருந்தபோது அவருக்குப் பரிசளிக்க விரும்பிய சஞ்சீவ் அவருக்காக பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்திருந்தார். அவர்களுடைய மகள் அய்லாவின் முதல் பிறந்தநாளின் போது மீண்டும் மினி கூப்பர் ஒன்றை பரிசளித்திருந்தார். மகள் அய்லா பிறந்த பிறகு … Read more

பாகிஸ்தான்: எதிர்க்கட்சி வரிசைக்கு தாவிய கூட்டணி கட்சி… பெரும்பான்மையை இழந்த இம்ரான் கான் அரசு!

கடந்த சில நாள்களாகவே பாகிஸ்தானில், பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாகப் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பலரும் போர்க்கொடி தூக்கினர். மேலும் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர். இது தொடர்பாக இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த நிலையில், இம்ரான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த MQM கட்சி, தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசின் பலம் 164 … Read more

“உலக சமத்துவமின்மை ஆய்வு முடிவில் குறைபாடுகள் உள்ளன" – நிர்மலா சீதாராமன் விளக்கம்

கடந்த ஆண்டு டிசம்பரில் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குநரான லூகாஸ் சான்சல், பிரெஞ்சு பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி உட்பட பல நிபுணர்களால் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த சர்வதேச அமைப்பின் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், “இந்தியா ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடு. 2021 ஆம் ஆண்டில் மொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதி, 1 சதவிகித மக்களிடம் உள்ளது. அதற்கும் அடுத்த நிலையில் வெறும் 13 சதவிகிதம் மக்களே உள்ளனர். கீழே … Read more

டெலிகிராம் பாணியைக் கையில் எடுக்கும் வாட்ஸ்அப்… புதிய அப்டேட்டில் உள்ள வசதி என்ன?

வாட்ஸ்அப் செயலியை விட டெலிகிராம் செயலியில் இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் டெலிகிராமில் 1.5 GB வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும். வாட்ஸ்அப் செயலியில் வெறும் 100MB வரையிலான ஃபைல்களைத்தான் அனுப்ப முடியும். இதனால் வாட்ஸ்அப்பில் பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாமல் பயனர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் 2GB வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை தனது அடுத்த அப்டேட்டில் கொண்டுவரவுள்ளது. வாட்ஸ்அப் இந்தப் புதிய அம்சம் தற்போது ஆப்பிள் iOS தளத்தில் சோதனை … Read more

திண்டுக்கல்: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து… வெடித்துச் சிதறிய பட்டாசுகள் – மூவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே வீரக்கல் கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டாசு தயாரிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தேனி, மதுரை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. விபத்து இந்தப் பகுதியில் திம்மராய பெருமாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்திவரும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நான்கு பேர் பணி செய்துவருகின்றனர். இந்த நிலையில், அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கருப்பையா, சசிகுமார் ஆகியோர் … Read more