Deva: "'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" – இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், “‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் … Read more

Madharaasi: "இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான்'' – 'மதராஸி' குறித்து சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மதராஸி படத்தில்… இந்நிலையில் ரசிகர்களுடன் ‘மதராஸி’ படத்தின் FDFS காட்சியைக் காண சென்னை சத்யம் திரையரங்கிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். படம் பார்த்த பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘மதராஸி’ படத்திற்கான ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தது. … Read more

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் – வைரலாகும் வீடியோ! – என்ன நடந்தது?

சொகுசு கப்பல்: துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் மெட் யில்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் (Med Yilmaz Shipyard) உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் 2024-ல் தொடங்கப்பட்டது. கட்டி முடித்த பிறகு, இஸ்தான்புல்லில் இருந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. டால்ஸே வென்டோ (Dolce Vento) என பெயரிடப்பட்ட அந்தக் கப்பல் 24 மீட்டர் நீளமும், 160 … Read more

Vijay: "விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா?" – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பதில் என்ன?

“மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த தெய்வம், மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும்” என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கலகலப்பாகப் பேசினார். நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த பிரபல திரைப்பட கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை ரொம்ப பிடிக்கும், க/பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் சூட்டிங்கிற்காக அடிக்கடி மதுரை வந்திருக்கிறேன். மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த கடவுள். மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வேன், இந்த முறை செல்ல முடியவில்லை. … Read more

“அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள், இதைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார். அது வரவேற்கத்தக்கது. வைத்திலிங்கம் செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருடைய நல்ல மதிப்பை பெற்றவர். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் சொன்னதை நான் … Read more

GST: பைக்/கார் விலைலாம் செமையா குறைஞ்சிடுச்சு! ஆனா இது மட்டும் நடக்காம இருக்கணும்!

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு ‛இதற்குத்தானடா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று ஒரு மிடில் க்ளாஸ் மாதவன் வாய்ஸில் இருந்து கத்த வேண்டும்போல் இருக்கிறது இந்த ஜிஎஸ்டி வரிக் குறைப்புச் செய்தி.  சும்மாவா பின்னே! 10% வரி குறைந்திருக்கிறது என்றால், கார்/பைக் வாங்கும் மிடில் க்ளாஸ் வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபம்தான். 28%-த்தில் இருந்து 18% ஆகக் குறைந்திருக்கிறது கார்/பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி. அதாவது, 350 சிசிக்குக் குறைந்த டூவீலர்களுக்கும், 1,200 சிசி மற்றும் 4 மீட்டருக்குட்பட்ட பெட்ரோல் வாகனங்களும், 4 … Read more

“பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' – லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை வண்ணத்தில் உருவான தந்தை பெரியார் படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் படத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் `விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ – ஸ்டாலின் சொன்ன பதில் இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 – 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி சாந்தகுமாரி மீதும் 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் துரைமுருகன், அவரின் மனைவி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், இருவரின் விடுதலையை … Read more

"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" – காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது அங்கே செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – இணை ஆணையர் விஜயகுமார் மேலும், சென்னை கிழக்கு மண்டல இணை … Read more

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" – தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார். மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, “நம் எல்லோருக்கும் ஒரு அம்மா இருக்கிறார், யாரும் யாருடைய அம்மாவைப் பார்த்தும் அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை. Prajwal Revanna – பிரஜ்வல் ரேவண்ணா ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், பிரதமர் மோடி எதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (பாலியல் … Read more