“விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' – செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர். இப்போது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டபடி விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். விஜய்யின் தவெக கட்சியில் … Read more

"ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுதான்!"- முனீஸ்காந்த்

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களைச் சந்தித்து கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் உரையாடினர். ரசிகர்கள் அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்தனர். திரைப்படத்தின் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கத்திற்கு படத்தின் கதாநாயகன் முனீஸ்காந்த் ஒரு சவரன் தங்கச் சங்கிலியை பரிசளித்தார். மேலும், திரைப்படத்தின் போஸ்டர்களை பொதுமக்களுக்கு வழங்கி, அனைவரும் … Read more

வெள்ளித்திரையின் `மேஜிக்' ரஜினிகாந்த்! – நீண்ட திரைப்பயணத்தில் நீங்கள் கொண்டாடிய தருணங்கள்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, ‘ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்’ என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படத் தேர்வு முறை அவரின் பக்குவமான திரைப்பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெறும் கமர்ஷியல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தனது வயதிற்கேற்பவும், தனது சமூகப் பொறுப்பிற்கு ஏற்பவும் கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கிறார். ரஜினியின் சமீபத்திய படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு சமூகச் செய்தியை … Read more

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் … Read more

`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' – ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!

ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறும். அதன் அடிப்படையில் இந்த வாரம், ‘HR88B8888’ என்ற பதிவு எண் ஏலத்துக்கு வந்தது. HR88B888 இந்த எண்ணுக்கான அடிப்படை ஏல விலையாக ரூ.50,000 என … Read more

Mask: "வெற்றி மாறன் சார் மென்டார் பண்ணினதுனாலதான் அதை செய்ய முடிஞ்சது!" – 'பேட்டரி' வெங்கட் ஷேரிங்ஸ்

கவின் நடித்திருக்கும் ‘மாஸ்க்’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஆண்ட்ரியா கேங்கில் வரும் பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். பெரிய மீசை, கலர் சட்டை, துப்பாக்கி வைத்திருக்கும் ஸ்டைல் என அந்த பேட்டரி கதாபாத்திரத்தின் ஹைலைட் விஷயங்களை பெரிய லிஸ்ட் போடலாம். Mask சிரிப்பூட்டும் காமிக் முகப்பாவனை, கோபமூட்டும் வில்லத்தனம் என நடிப்பிலும் தன்னுடைய இருப்பை ஆழமாக பதித்திருக்கிறார் வெங்கட். இதற்கு முன் ‘அயலான்’ திரைப்படத்தில் ஏலியனுக்கு டூப் போட்டிருந்ததும் இவர்தான். … Read more

காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! – பரபர அப்டேஸ்!

இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்களை மாற்றி மாற்றி பயணித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார். செங்கோட்டையன் நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் தங்கியிருந்தார். காலையில் 8:30 மணிக்கு இனோவா ‘TN09 CE 9393’ நம்பர் ப்ளேட் கொண்ட காரில் கிளம்பினார். மீடியாக்கள் வட்டமடிப்பதைப் பார்த்து யூடர்ன் போட்டு … Read more

கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் – வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வரகழியாறு மரக்கூண்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. ரோலக்ஸ் யானை இதையடுத்து கடந்த நவம்பர் 12 ம் தேதி அந்த யானை மந்திரி்மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் ரோலக்ஸ் யானை திடீரென்று உயிரிழந்த சம்பவம் … Read more