“பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' – 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த கிராம மக்கள்
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. அரசின் மற்ற சேவைகளை விட அடிப்படை வசதிகளான சாலை, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கூட அந்த கிராமத்தில் இல்லை. பாலம் கட்டித் தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து, பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. … Read more