7 பேர் விடுதலை… மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் … Read more

பாரதியாரின் கனவை நனவாக்குவதுதான் காசி தமிழ் சங்கமம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாசரத்துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் … Read more

வாரிசு ரிலீஸ் சிக்கலுக்கு காரணம் உதயநிதி ஸ்டாலின்? கொளுத்திபோட்ட கடம்பூர் ராஜூ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் போட்டியும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.  வாரிசு படத்தை 7ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இதில் இருக்கும் பிரச்சனை … Read more

மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் – காசியில் இளையராஜா பேச்சு

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான இளையராஜா பேசுகையில், “காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கே விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பாரதியார் … Read more

எடப்பாடியால் ஒன்னும் செய்ய முடியாது – டிடிவி தினகரன் தடாலடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது. அவரது சொந்த ஊரில்கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததுபோல் எடப்பாடி பழனிசாமியால் சந்திக்க முடியுமா. இவர் கட்சியின் … Read more

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு US FDA அனுமதி!

அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அங்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி இனி அமெரிக்க சந்தையில் கிடைக்கும். அத்தகைய அனுமதியை வழங்கிய இரண்டாவது நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோழியில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் இந்த வகை இறைச்சி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்த வகை இறைச்சி சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளது  கலிபோர்னியாவைச் சேர்ந்த அப்சைட் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் … Read more

வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் – பேரரசு

விமல், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா திரைப்பட இயக்குனர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பேரரசு,லிங்குசாமி,எழில் மற்றும் நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பேரரசு பேசியபோது, ” துணிவு, வாரிசு திரைப்படங்கள் பொங்கலுக்கு வருகிறது. ஆனால், தெலுங்கில் பொங்கலுக்கு வெளியிட மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்று பிரிவினைகள் இல்லை. கேஜிஎப்,பாகுபலி போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பண்டிகை தினத்தில் தான் ஓடி வெற்றிபெற்றது. பொன்னியின் செல்வனை … Read more

அஜித்துக்கு கதை ரெடி செய்த லோகேஷ்?… உற்சாகத்தில் ரசிகர்கள்

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தை ஈர்த்தவர் அடுத்ததாக கைதி படம் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படமும் வரவேற்பைப் பெற்றது. முதல் மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குநராக மாறிய லோகேஷின் கரியரை கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் படம் புரட்டிப்போட்டது. கமலின் தீவிர ரசிகரான அவர் விக்ரம் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். ஒரு ரசிகன் தனக்கு … Read more

ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு  சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கடந்த 7ஆம் தேதி டெண்டர் கோரியிருந்தார். இந்த டெண்டரில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும், ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனைகள் தனிச்சையானவை என்று கூறி, இந்த டெண்டரை … Read more

காவல் துறைக்கு சுதந்திரம் கொடுங்கள் – அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை எழும்பூர் காவல் நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்மநபர்களால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக்கேடானதாகும். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் … Read more