NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்

உகாண்டாவில் இந்தியருக்கு நடந்த கொடூரம் சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி களப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இளம் இந்திய தொழிலதிபர் (என்ஆர்ஐ தொழிலதிபர்) மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அந்த  தொழிலதிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர் குந்தாஜ் படேல் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.  இந்த நிலையில் தற்போது இந்த … Read more

கேரளாவில் அதிகம் வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்

உலகளவில்  தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. வசூலிலும் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை செய்து வருவது,தமிழ் சினிமா துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கே பெருமிதமாக இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் உலகளவில் வரலாறு காணாத வசூல் சாதனைகளை படைத்தன. விக்ரம் 400 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, கமலின் மாபெரும் கமர்ஷியல் ஹிட்படமாக மாறியது. அதேபோல் பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் வசூலை … Read more

ஒன்றுமே தெரியாமல் ஆளுநர் உளறக் கூடாது – சீமான் காட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கனாரின் சிலைக்கும் பல்வேறு தரப்பினர் இன்று மரியாதை செலுத்தினர். அந்த வகையில், சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்கனாரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்.  இதன்பின்னர், … Read more

Seoul Halloween stampede: சமீபத்தில் உலகையே உலுக்கிய அசம்பாவிதங்கள்!

Seoul Halloween stampede : தென்கொரிய தலைநகர் சீயோலில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் இளைஞர்கள், பதின்ம வயதினர் என தெரிய வருகிறது. ஹலோவீன் கொண்டாடத்தின்போது, சியோல் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  இக்கொடுரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று முழுவதும் துக்க அனுசரிக்கப்படும் என  தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார். “நடக்கக்கூடாத ஒரு சோகமும் … Read more

ஹீரோவாக களமிறக்கிய யூடியூப் புகழ் மாதேவன்!

மிரர் மைண்ட் ‌புரடக்சன் சார்பில் தினேஷ் பிரசாத் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் மாதேவன், ஷாலி நிவகேஷ், ஆஷிகா யாஷ் நடித்துள்ளனர். ஒருவருக்கு திருமணத்திற்கு பிறகு காதல் வராதா ? அப்படி வந்தால் அதை இணையிடம் எப்படி தெரிவிப்பது?, இந்த மையப்புள்ளியில் சுழலும் கதையில், இளைஞர்களின் உறவுச்சிக்கலை பேசும் குறும்படமாக இப்படம் உருவாகியுள்ளது.  புதிய இளம் திறமையாளர்களின் முயற்சியில் சென்னையில் ஒரே நாளில் இக்குறும்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. மேலும் தமிழில் புது முயற்சியாக முதன்முறையாக … Read more

குளிக்கும் போது செல்போனில் படம் பிடித்து இளம் பெண்ணை மிரட்டிய கணவரின் நண்பர்!

கரூர் அடுத்த ராயனூர் பகுதிக்கு உட்பட்ட தில்லைநகரை சேர்ந்தவர் கற்பகம் (29) இவர் தனது மாமியார் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பு திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் போராட்டம் குறித்து கேட்ட பொழுது, ராயனூர் தில்லை நகரில் தனது கணவர் அருண்குமார் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், இவரது கணவர் வேலை விஷயமாக … Read more

தென்னகத்து போஸ் முத்துராமலிங்க தேவர் – மு.க. ஸ்டாலின் ட்வீட்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு அக்டோபர் 28,29,30 ஆகிய மூன்று தினங்களில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். அப்படி இந்த ஆண்டு தேவரின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்துவருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்றனர். திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் இன்று சென்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது … Read more

வாடிவாசல் கதை இதுதான்… வெற்றிமாறன் வெளியிட்ட தகவல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். வெற்றியின் படங்கள் அனைத்தும் வாழ்வியலையும், அரசியலையும் தீர்க்கமாக பேசக்கூடியவை. அதனால்தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட மூத்த இயக்குநர்கள் பலரும் வெற்றிமாறனை பல மேடைகளில் புகழ்ந்துள்ளனர். முக்கியமாக கற்பனையாக மட்டும் கதையை யோசிக்கலாம் என்ற நிலையிலிருந்து நாவல்களை அடிப்படையாக வைத்தும் சினிமா எடுக்கலாம் என்ற விதையை ஆழமாக விதைத்தவர் வெற்றிமாறன். அவர் இயக்கிய அசுரன் அந்த வகையை சேர்ந்தது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த … Read more

பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி வெளியீட்டால் அதிருப்தியடைந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டுவிட்டார்.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் அமோக வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது.  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், … Read more

அண்ணாமலை ஒரு கோமாளிங்க – பங்கம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகளை  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. 44 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று … Read more