தேவர் குரு பூஜையில் முதலமைச்சர் ஆப்செண்ட்… காரணம் இதுதான்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டுவருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி,  அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை நேற்று தொடங்கியது. நேற்று காலை நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் வேத பாராயணம், தீபாராதனை, யாத்ராதானம் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது. கருடன் … Read more

காந்தாரா இயக்குநருடன் சந்திப்பு… சிலாகித்து பேசிய ரஜினி

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது.  அதன்படி … Read more

கோவையில் பந்த்; ஆனா அது அண்ணாமலைக்கே தெரியாது – பாஜக துணை தலைவர்

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக, கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எதிர் மனுதரராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த நிலையில்,நீதிமன்ற விசாரணையின்போது  அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது குறித்து … Read more

உலகில் உயரமான சிவன் சிலை… இன்று திறப்பு

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது. 369 அடி உயரமுள்ள இந்த சிலையானது உலகிலேயே உயரமான சிவன் சிலை ஆகும். ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது தியானம் செய்வது போல் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த … Read more

பரிசோதனை முடிந்தது… வீடு திரும்பினார் முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனைக்காக அவர் சென்னை போரூரில் இருக்கும் ராமசந்திரா மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றார். அங்கு அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண முதுகு வலி என்பது உறுதியானது. தொடர்ந்து பரிசோதனை முடிந்த சூழலில் நேற்றிரவே வீடு திரும்பிவிட்டார். இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு … Read more

பொய்களை மொய்யாக எழுதுகிறார் பழனிசாமி – மருது அழகுராஜ் ஆவேசம்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்து கொண்டேன் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சொன்னது பச்சைப்பொய் என்பது, அவர் அமைத்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் மூலம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தின் ஒவ்வொரு வினாடி விபரங்களும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அன்றைய தலைமைச்செயலாளர் மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது என்னும் உண்மை அருணா ஜெகதீசன் விசாரணை கமிசன் அறிக்கையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. … Read more

ஓடிடியில் வெளியானது பொன்னியின் செல்வன்… ஆனால் ஒரு ட்விஸ்ட்

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் தற்போது திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு சினிமா … Read more

மனநல சிகிச்சையிலிருந்து திருமணம்வரை – கீழ்பாக்கத்தில் ஒரு காதல் கதை

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகம் மற்றும் மருத்துவமனை 200 ஆண்டுகள் பழமையானது. கீழ்ப்பாக்கம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் அளவுக்கு இங்குள்ள மனநல காப்பகம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேல் சிகிச்சையில் இருக்கின்றனர். அப்படி, சென்னையை சேர்ந்த முதுநிலை பட்டதாரியான மகேந்திரன், 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால், உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அதேபோல், வேலூரை சேர்ந்த … Read more

₹3.5 லட்சம் கோடி… $44 பில்லியன் டாலர்… பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்!

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் இப்போது எலோன் மஸ்க்கிற்கு சொந்தமாகிவிட்டது. கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடைந்தவுடன், எலோன் மஸ்க் அதன் மறுசீரமைப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளை அவர் பணியில் இருந்து நீக்கியுள்ளார். எலோன் மஸ்க் ட்விட்டரை சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு (44 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியுள்ளார் . இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. எலோன் மஸ்க் தனது … Read more

என்னது நித்யா மேனன் – பார்வதி கர்ப்பமா? வைரலாகும் பதிவு

சயனோரா, பார்வதி திருவோத், நித்யா மேனன் ஆகியோரின் சமூக வலைதள பதிவுகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவர்கள் மூவரும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகைகள் பார்வதி திருவோத் மற்றும் நித்யா மேனன். இதில் பார்வதி திருவோத் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மற்றும் மரியான் திரைப்படத்திலும் … Read more