ஸ்டார்லிங்க் இன்டர்நெட் செலவு தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்றுவிட்டோம்: எலோன் மஸ்க்

வாஷிங்டன்: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பிற்கு பணம் செலுத்துவது தொடர்பாக பென்டகன் பரிசீலிப்பது பற்றி இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பிரபல செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டார்லிங் செயல்பாட்டிற்கு ஆகும் செலவை ஸ்பேஸ்எக்ஸ் … Read more

RSS ஊர்வலம் தொடர்பான திருமாவளவன் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் இரண்டாம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் … Read more

பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் – ரக்ஷிதாவுக்கு இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜிபி முத்து, அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்களுடன் 20 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். முதல் வாரத்தை கடந்து 2வது வாரத்தை எட்டியிருக்கிறது பிக்பாஸ். கடந்த சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. விதவிதமான டாஸ்குகள் கொடுத்து போட்டியாளர்களை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ்.  டாஸ்குகள் மட்டும் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கும் … Read more

இலங்கையுடன் உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் சீமான்

சென்னை: இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து, மாநில உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சீனாவுடன் கூட்டு வைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு … Read more

கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்… பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து!

கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.  பிக் பாஸ் ஆறாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சில நிகழ்ச்சிகளை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்,  இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த சீசனில் … Read more

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்ளவில்லை: முடிவை மாற்றிய ஆஸ்திரேலியா

சிட்னி: இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த முடிவை ஆஸ்திரேலியா மாற்றியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக் கொள்வதுஎன்ற முக்கியமான விஷயத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார். மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதில்லை என்று தெரிவித்த ஆஸ்திரேலியா, முந்தைய பழமைவாத அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முடிவை மாற்றி அமைத்தது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் மூலம் நகரின் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும், ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அல்ல … Read more

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதல்! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற கையெறி குண்டுத் தாக்குதலில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்… இதற்கு காரணமான இம்ரான் கனி என அடையாளம் காணப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹர்மென் பகுதியில் இன்று அதிகாலை (அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை) நடந்த கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஹர்மைன் ஷோபியானில் வசிக்கும் இம்ரான் கனி என அவர் அடையாளம் காணப்பட்டார். வாடகைக்கு … Read more

திருமணத்திற்கு பிறகும் வேறு நடிகையுடன் உறவில் இருந்த திரை பிரபலங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் பல நடிகைகளுடன் உறவில் இருந்துள்ளார், 24 வயதில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.  சரிகாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் வாணியை பிரிந்தார், பின்னர் சிம்ரனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் சரிகாவை பிரிந்தார்.  அதன்பின்னர் சமீபத்தில் கௌதமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருடனும் உறவை முறித்து கொண்டிருக்கிறார். நாகர்ஜுனா 1984ம் ஆண்டு லட்சுமி டகுபதியை திருமணம் செய்துகொண்டார், பின்னர் 1990ம் ஆண்டு இருவரும் உறவை முறித்துக்கொண்டனர்.  அதன்பின்னர் 1992ம் ஆண்டு நாகர்ஜுனா நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார்.  … Read more

கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்

American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நிலையில், திங்களன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை சுகாதார அதிகாரிகளை வழங்குவதைத் தடுத்தது என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பான டிரம்பின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. டிரம்ப் உதவியாளர்கள் கோவிட் … Read more

ரஷ்ய அடுக்குமாடி கட்டடத்தில் போர் விமானம் மோதி விபத்து!

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஐஸ்க் (Yesyk) நகரில், ரஷ்ய போர் விமானம் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் மோதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பெரும் புகை எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை ஐஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கவர்னர் வெனியமின் கோண்ட்ராடியேவ் கூறுகையில், விபத்துக்குள்ளானது சுகோய் … Read more