UAE அதிபருக்கு ஆடுகளை அனுப்பும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்… காரணம் என்ன

பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுத்தன. இந்த நெருக்கடிக்கு மத்தியில், உதவி பெறவும், அந்த நாடுகளின் மனதை மாற்றவும் பாகிஸ்தான் புதுப்புது வழிகளை கையாண்டு வருகிறது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு கடன் தொல்லையில் இருந்து தன்னை எப்படி மீட்பது எனப் புரியாமல் தவித்து … Read more

சுவாசிக்க விடுங்கள் மூச்சு முட்டுகிறது கடலின் கோரிக்கை: June 8 World Oceans Day

புதுடெல்லி: நாம் வசிக்கும் பூமி நீல கிரகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பின் பெரும்பகுதி பெருங்கடல்களைக் கொண்டுள்ளது.கடல்கள் ஆக்ரமித்ததைத் தவிர எஞ்சியுள்ள பூமியின் பகுதியில் மனிதர்களான வசிக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்பது உண்மையான விஷயம். உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெருங்கடல்கள் மற்றும் கடல் நீரோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பூமி கிரகத்தை குளிர்ச்சியாகவும் சூடாகவும் வைத்திருக்கின்றன. தாதுக்கள் மற்றும் எண்ணெய் வளம் என பெருங்கடல்கள் வளமானவை. நவீன உலகப் பொருளாதாரத்திற்கு கடல்களின் பங்கு மிகவும் … Read more

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்… புதிய கலாச்சாரத்திற்கு கைக்கொடுக்கும் உலக நாடுகள்

70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3,300 பணியாளர்கள் பங்கேற்புடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற உலகின் மிகப்பெரிய சோதனை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிய உலகளாவிய ஆய்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையோட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்து 3 நாட்கள் விடுமுறை பெறுகிறார்கள். இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இவர்களுக்கு … Read more

கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறதா

பசிபிக் பகுதியில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில், கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ பலத்தை விரிவுபடுத்தும் ராணுவ தளத்தின் கட்டுமானப் பணிகளை கம்போடியாவில் சீனா துவக்கவிருக்கிறது.  கம்போடியாவில் அமையவிருக்கும் இந்த ராணுவத்தளம் மலாக்கா ஜலசந்தி (Malacca Straits)க்கு அருகில் சீனாவின் ராணுவ செல்வாக்கையும் அதிகரிக்கும். மலாக்கா ஜலசந்தி (Malacca Straits) இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தனது … Read more

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

அமெரிக்கா: சமீப காலமாக அமெரிக்காவில் கைத்துப்பாக்கி கலாச்சாரத்தால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் துப்பாக்கி சூடு தொடர்பான 3க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இதனைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் இந்த திசையில் முதன் முதலாக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. நியூயார்க்கில் கைத்துப்பாக்கிக்கு புதிய சட்டம் அமெரிக்காவில் அதிகரித்து … Read more

பெண்ணை தண்டாவளத்தில் தள்ளி விட்ட நபர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்செஸ்டர் & ஜாக்சன் ஏவ் ரயில் நிலையத்தின் நடைமேடையில் நடந்து வந்த 52 வயதுள்ள பெண்ணை அவரது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விரைந்து சென்று அப்பெண்ணைக் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் படிக்க | அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு … Read more

104வது நாளாக தொடரும் போர்; அமெரிக்கா மீது ரஷ்யா விதித்துள்ள முக்கிய தடை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 104 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனுடன் உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்யா இப்போது அமெரிக்கா மீது மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் 61 அமெரிக்க  61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள்  மீது பொருளாதார … Read more

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி  கண்மூடித்தனமாக சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது துப்பாக்கி ஏந்திய நபர்  நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒண்டோ மாநிலத்தின் … Read more

Extremely Poor: தீவிர வறுமை நிலை என்பது குறித்த உலக வங்கியின் புதிய அளகோல்

உலகம் முழுவதும் பண வீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், உலகளாவிய அளவில் வறுமைக் கோடு என்பதற்கான வருமான வரையறை அவ்வப்போது மாற்றப்படுகிறது. தற்போது, ​​2015 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதற்கிடையில் பல விஷயங்கள் மாறியுள்ளன. எனவே உலக வங்கி இந்த புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது. இந்த அளவு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும்.  தற்போது, ஒரு நபர் ஒரு நாளைக்கு 167 ரூபாய் ($2.15) க்கும் … Read more

அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரம் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது. நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிகமிருந்த பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். மக்கள் அதிகமாகக் கூடும் பகுதி என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 … Read more