கோத்தபய ராஜபக்ச தலைமேல் தொங்கும் கத்தி; மனித் உரிமை அமைப்பு அளித்த புகார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை  கைது … Read more

மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம்

மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்ப சட்டத்தில் மாற்றம் தேவை என எகிப்திய நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் எழுதிய கடிதத்தில், “மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்புவது, தண்டனை கொடுப்பதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும். இந்த நடவடிக்கை தொடக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே இருந்தாலும், இலக்கை அடைய முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதம் தற்போது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த வித்தியாசமான கோரிக்கையின் பின்னணியும் ஆச்சரியமானதாக இருக்கிறது. பெண் … Read more

”நமக்குள்ளும் ஹீரோ உண்டு” – 5-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் என்ற நகரில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. அப்போது, கீழே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அந்த இளைஞரின் பெயர் ஷென் டோங் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க | Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று? Heroes among … Read more

திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

பாகிஸ்தானை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற அரசின் சொத்துக்கள் விற்கப்படும் என அந்நாட்டு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் தனது தேசிய சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பண வீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக் கடன் உச்ச … Read more

Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு

Planet and their Rings: நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் இருந்து சனியை வேறுபடுத்துவது அந்த கிரகத்தில் உள்ள கம்பீரமான வளையங்கள் ஆகும். சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, சனியின் வளையங்களை அமெச்சூர் தொலைநோக்கிகளிலிருந்தும் பார்க்கலாம். அரசர்களுக்கு கிரீடம் போல, சனி கிரகத்திற்கு அதன் வளையங்கள் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஆனால் பிற கிரகங்கள் அனைத்திற்கும் சனியைப் போன்ற வளையஙக்ள் இல்லை? இப்படி பல விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் எழுகின்றன. சனி … Read more

தானிய ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கும் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைனுடான போருக்கு மத்தியில், தானிய ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணிநேரங்களிலேயே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது தானிய ஒப்பந்தம் தொடர்பான ரஷ்யாவின் அலட்சியப்போக்கை காட்டுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளும் தானிய ஏற்றுமதி பற்றிய புரிதலை எட்ட முடிந்த நிலையில், அதை தொடர்வதே உலகத்திற்கு நல்லது என்று கவலை கலந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான நிம்மதியை உலகம் அனுபவிப்பதைக்கூட ரஷ்யா … Read more

குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO

உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிப்பு: குரங்கு அம்மையை உலக சுகாதார அமைப்பு (WHO) வெடிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்ற விவாதங்களுக்கு மத்தியில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை “உலகளாவிய சுகாதார அவசரநிலை” என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  அறிவித்தார். பல காரணங்களுக்காகவும், உலகளாவிய குரங்கு அம்மை நோய் பரவல், பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட … Read more

Twitter: பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வருமானத்தில் சரிவு

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அந்த நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவன பங்குகளை, ஒரு பங்கிற்கு  54.20 டாலர் என்ற அளவில், ஒட்டுமொத்தமாக 4400 கோடிக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை, அதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் … Read more

ஐநாவுடன் ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தம்; உலகின் உணவு நெருக்கடிக்கு தீர்வாகுமா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன.சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா  ஐநா உடன்  செய்துள்ள ஒப்பந்தத்திற்குப் பிறகு, உணவு நெருக்கடியிலிருந்து உலகம் விடுபடக் … Read more

Volodymyr Zelensky: உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு

ரஷ்யா-உக்ரைன் போர்: போருக்கு மத்தியில், உக்ரைனிடம் தேங்கிக் கிடக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா தானியங்கள் ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளுடனான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, உக்ரைனிடம் உள்ள … Read more