இந்தோனேசியாவில் 6 1 நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்” என்று சுனாமி அறிவுறுத்தல் குழு தெரிவித்துள்ளது. கிழக்கு திமோர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (2022, மே 27)  6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இருப்பினும் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் … Read more

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை…எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

வைரஸ் தொற்றால் ஏற்படும் குரங்கம்மை ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், காங்கோ, நைஜீரியாவில் பரவலாக உள்ளது. ஆனால், பரவலாக காணப்படும் நாடுகளின்றி பல்வேறு புதிய நாடுகளிலும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை … Read more

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது…ஜெனிஃபர் லோபஸ் உருக்கம்

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி … Read more

வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளை தண்டிக்கும் அமெரிக்காவின் முயற்சியை நிறுத்த ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. தென்கொரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சியோலில் இருந்து புறப்பட்டுவிட்டார். அவர் கிளம்பிய உடனேயே, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்தது. இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க … Read more

41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரன்கள் : 113வது பிறந்தநாளை கொண்டாடும் நபர்.!

அப்பா, அம்மா மற்றும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் சுருங்கிபோன குடும்ப சூழலைதான் நாம் இன்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கூட்டு குடும்பம் என்று ஒன்று இருந்தது என கதை சொல்லும் நிலையும் உருவாகி விட்டது. நம் தாத்தா, பாட்டி, பாட்டன் என பரம்பரை கடந்து வந்த பாதை இதுவல்ல என்பதுதான் உண்மை.  குறைந்தது 10 குழந்தைகளை பெற்றெடுத்து உறவுகளை பலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அப்படி தங்களுக்கென ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதையே கனவாகவும் லட்சியமாகவும் கொண்ட … Read more

Elon Musk: 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்

கடந்த 24 மணி நேரத்தில் எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்றாலும், 2022 ம் ஆண்டில் அவர் 70 பில்லியன் டாலரை இழந்தார் என ப்ளூம்பெர்க் குறியீடு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.  புதன்கிழமை, எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு, டெஸ்லாவின் பங்குகளில் சுமார் 5 சதவீதத்துடன் மீண்டும் 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றாலும், இந்த ஆண்டு எலோன் மஸ்கின், நிகர சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்கும் … Read more

ஆஃப்கன் குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது

ஆஃப்கானிஸ்தானில் நேற்று (2022, மே 25) நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காபூல் மசூதி மற்றும் மசார்-இ-ஷரீப்பில் மூன்று மினி வேன்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.  ஆஃப்கனின் மசார்-இ-ஷெரீப் பகுதியில் மினிவேன் குண்டு வெடிப்புகளில் பலர் காயமடைந்துள்ளனர்.  மினிவேன்களுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆப்கனின் பல்க் மாகாண தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி தெரிவித்தார். மசார்-இ-ஷரீப் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் சிறுபான்மை இன ஷிய இஸ்லாமிய இனத்தை … Read more

இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்த பிறகு, புதிய அரசு அமைக்கப்பட்டது, ஆனால் இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை எந்த விதத்திலும் மேம்படவில்லை . இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தான் இலங்கையை போல் திவால் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸின் ட்வீட், பாகிஸ்தானின் அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் … Read more

Russia Ukraine war update: மரியுபோல் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் 200 சடலங்கள்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய படையெடுப்பு இன்றுவரை தொடரும் நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மரியுபோல் நகரின் மேயரின் ஆலோசகரின் கூற்றுப்படி, உக்ரைனின் மரியுபோல் நகரில், ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து இடிபாடுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இடிபாடுகளுக்குக் கீழ், கட்டிடத்தின் அடித்தளத்தில் சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சர்வதேச சமூகத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் … Read more

அமெரிக்காவில் மாணவர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மாணவர்களை குறிவைத்தே நடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் கொலராடோவின் … Read more