உலக முட்டை தினம்: நாமக்கல்லில் 10,000 முட்டைகள் இலவசமாக விநியோகம்

உலக முட்டை தினம் 1996 ஆம் ஆண்டு வியன்னாவில் நிறுவப்பட்டது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் இரண்டாவது வெள்ளிக்கிழமை முட்டையின் சக்தியைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து, உலகெங்கிலும் உள்ள முட்டை ரசிகர்கள் இந்த நம்பமுடியாத ஊட்டச்சத்து சக்தியை மதிக்க புதிய படைப்பு வழிகளை யோசித்தனர், மேலும் கொண்டாட்ட நாள் வளர்ந்து காலப்போக்கில் வளர்ந்துள்ளது. அதன்படி உலகம் முழுவது அக்டோபர் 14-ஆம் தேதி உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துக்கள் மற்றும் … Read more

Video: காதலியுடன் ஷாப்பிங்… வசமாய் சிக்கிய கணவன் – வெளுத்து வாங்கிய மனைவி, மாமியார்

திரைப்படத்தைப் போன்ற ஒரு சண்டை காட்சி உத்தரப்பிரதேசத்தின் காசியபாத் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த கடைவீதியில் நிகழ்ந்துள்ளது. ரகசிய காதலியுடன் தனியாக ஷாப்பிங் வந்த கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவியின் ஆக்ரோஷ சம்பவம்தான் அது.  அங்கிருந்தவர்கள் அவர்களின் சண்டையை வீடியோ எடுத்த நிலையில், அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபரின் சட்டையை பிடித்து, அவரின் மனைவியும், மனைவியின் சில தோழிகளும் அவரை பலமாக தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் … Read more

ஈரோடு: லாரிக்குள் விழுந்து பலியான ரயில்வே டிக்கெட் பரிசோதகர்: பதைபதைக்க வைக்கும் வீடியோ

தஞ்சாவூர் மவட்டத்தை சேர்ந்த செல்வம் ,விஜயா ஆகியோரின் இரண்டாவது மகள்  அனிதா, (இன்னும் திருமணம் ஆகவில்லை).ரயில்வேயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஈரோடு திண்டலில் உறவினரின்  இறப்பு துக்க நிகழ்வுக்காக இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் வந்துள்ளனர். அருகில் உள்ள கடைக்கு செல்ல அனிதா தனது உறவினர் மகன் தனுஷ் மற்றும் 11 வயது சிறுவன் ரியாஸ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கடைக்கு சென்றுவிட்டு பெருந்துறை சாலையில் வீரப்பன்பாளையம் அருகே சென்று கொண்டு இருந்த … Read more

உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி… பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் – யார் அந்த பெண்?

ஒடிசாவின் சாதராண கிராமத்தில் இருந்து வந்து, தற்போது பல கோடிகளுக்கு அதிபதியான இளம்பெண் குறித்த பேச்சுக்கள்தான் நாடு முழுவதும் எழுந்துள்ளது. கடந்த அக். 6ஆம் தேதி மிரட்டி பணம் பறித்தல் குற்றத்திற்காக அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கதையை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளதாக பிரபல ஒடியா இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான கதைதான் அந்த 26 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை.  அவர் குறித்த போலீசாரின் அறிக்கையில்,”அர்ச்சனா … Read more

தொடரும் மனஸ்தாபம்… விஜய் தகப்பனாருக்கா இந்த நிலைமை?… வைரலாகும் புகைப்படம்

கோலிவுட் வசூல் மன்னர்களில் ஒருவர் விஜய். தற்போது மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருக்கும் விஜய்க்கு, அவருடைய ஆரம்பகாலத்தில் துணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.  விஜய்யை நடிகராக அறிமுகம் செய்து அவருக்காக பல படங்களை இயக்கி, மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு தேர்வு செய்வது என முழுதாக அவருடனேயே இருந்தார். இதனையடுத்து விஜய்யும் தனது திறமையை திறம்பட வெளிக்காட்ட ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன. அதனைத் தொடர்ந்து படிப்படியாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். … Read more

PFI Ban​: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு அலுவலகங்களுக்கு சீல்

கோவை: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம்  தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பலர் கைது செய்யப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் … Read more

சர்ச்சை ஏற்படுத்திய அழகுப்போட்டி விளம்பரம்! ‘இந்த’ சாதி மட்டும் தான் கலந்துக்கலாம்!

பதிண்டா: பெண்களின் அழகுப் போட்டியின் போஸ்டர்கள் ஏற்படுத்திய சர்ச்சையால் இருவர் கைது செய்யப்பட்டனர். அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. பஞ்சாபில் நடைபெறவிருந்த ‘அழகு போட்டியில்’ அமைப்பாளர்களின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு ஏற்பட்டது. அக்டோபர் 23 ஆம் தேதி பதிண்டாவில் உள்ள ஸ்வீட் மிலன் ஹோட்டலில் நடைபெறவிருந்த இந்த அழகுப்போட்டியின் விளம்பரங்களால் கோபமடைந்த பல்வேறு சமூக மற்றும் மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பஞ்சாப் மாநிலம் … Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்… ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார். ஜூன் மாதம்தான் … Read more

பூவையார் கார் வாங்க பணம் கொடுத்தது யார்? விலை எவ்வளவு தெரியுமா?

சூப்பர் சிங்கரில் போட்டியாளராக வந்தவர் பூவையார், தன்னுடைய பாடல் மற்றும் சுட்டிதனத்தால் ரசிகர்களை வெகு சீக்கிரமே கவர்ந்தார். அவர் போட்டியாளராக வந்த முதல் நாள் தொகுப்பாளினி பிரியங்காவை கலாய்த்த வீடியோ யூ டியூப்பில் இன்றும் அதிகமானோரால் ரசிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பூவையார், 3வது இடத்தை பிடித்தார். அந்த சீசனுக்குப் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் பாடல் ஒன்றை … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்

புதுடெல்லி: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு விடிவெள்ளி தெரிகிறது. உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்றுக் கொண்டிருந்த  மாணவர்களுக்கு, தங்கள் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது. உக்ரைனில் இருந்து திரும்பிய 2000 இந்திய மாணவர்கள் எங்கே படிப்பார்கள்? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. உக்ரைனில் படித்து வந்த மாணவர்கள், இந்தியாவில் அல்ல, மற்றொரு வெளிநாட்டில் தங்கள் படிப்பை படித்து முடிப்பார்கள். மருத்துவ மாணவர்கள் … Read more