எப்போது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்?… உறுதிப்படுத்தினார் தமன்

நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கிடையே வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என … Read more

1,050 கோடி ரூபாய் புதிய வகுப்பறைகளுக்கு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது 110 விதியின் கீழ் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பள்ளிக்கல்வி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணம், காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் … Read more

திரில்லர் ஜானரில் ஜிவி பிரகாஷ்; நாளை டீசர் அப்டேட்

தமிழ் திரை உலகில் பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் 13 என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் இயக்குனர் கௌதம் மேனன் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார்.  இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் இதுவரை நடிக்காத ஜானரில் நடித்துள்ளார். இப்படம் சற்று வித்தியாசமாகவும், திரில்லராகவும் இருக்கும் … Read more

சிக்னல் கோளாறினால் பாதியில் நின்ற இரயில்! ஓட்டுநர் செயலால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

சிக்னல் கோளாறு காரணமாக பாதியிலேயே ரயில் நின்ற நிலையில், சாமார்த்தியமாக செயல்பட்டு இரயிலை ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று மதியம் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 750 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இரயில் ஆனது செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள பொத்தேரி மற்றும் காட்டாங்குளத்தூர் இடையே சென்று கொண்டிருக்கும் பொழுது ரயில்வே சிக்னல் மின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு சுதாரித்த ரயில்வே ஓட்டுநர் … Read more

விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; பயத்தில் அலறிய பயணிகள்!

விமான பயணத்தில் ‘ஸ்னேக் ஆன் எ பிளேன்’ திரைப்படம் போன்ற சம்பவம்  நடந்தால் எப்படி இருக்கும்…  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து நியூஜெர்சி சென்ற விமானத்தில் பயணித்தவர்களுக்கு இதே நிலை தான் ஏற்பட்டது. விமானம் தரையிறங்குவதற்காக பயணிகள் இறங்கும் போது விமானத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாம்பை கண்டதும் பிஸினஸ் வகுப்பில் இருந்த பயணிகள் அலறியடித்து தங்கள் கால்களை மேலே இழுத்துக் கொண்டு சீட்டின் மேல் வைத்துக் கொண்டனர். பின்னர் விமான … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதியுங்கள்… சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை … Read more

தடையை மீறி எடப்பாடி பழனிசாமி போராட்டம்: கைது செய்ய வந்த போலீஸாருடன் தள்ளுமுள்ளு

சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காததைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, … Read more

137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸின் கட்சியின் புதிய தலைவராகிறார் மல்லிகார்ஜுன் கார்கே!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தேசிய தலைவராக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒரு தலைவர் நாட்டின் பழமையான கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக காந்தி குடும்பத்தை சேராத சீதாராம் கேசரி இருந்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முறை கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை – சட்டமசோதா நிறைவேற்றம்; முழுவிவரம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள்வரை தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நேற்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார். இப்படி தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் … Read more

பிக்பாஸ் வைத்த டாஸ்க்கால் வந்த வினை: பழிக்கு பழி; மைனா நந்தினி வியப்பு

பிக்பாஸ் வீட்டில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க கதை சொல்லும் நேரம் டாஸ்க் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தவாரம் டைரக்ட் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறமாட்டார்கள். டாஸ்க் தொடங்கி முதல் 60 நொடிகளுக்குள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் 3 பசர்களை அடித்துவிட்டால் அவர்கள் அதற்கு மேல் தங்களின் கதையை தொடரக்கூடாது. ஒருவேளை 3 பசர்கள் வராவிட்டால் அவர்கள் தங்களின் கதையை தொடரலாம். இதுதான் பிக்பாஸ் கொடுத்திருக்கும் விதிமுறை. இதனடிப்படையில் தனலட்சுமி முதல் ஆளாக, … Read more