அமீர்கானுக்கு சப்போர்ட் செய்ததால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்தது சிக்கல்

பாலிவுட் திரையுலகில் இப்போது அடிக்கடி Boycott பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் வெளியான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்குமாறு பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதாக 2015 ஆம் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக, அவரின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது அதிகளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக விஜய் தேவரகொண்டா வெளிப்படையாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசும்போது, ” உங்களின் பாய்காட் பிரச்சாரம் … Read more

தஞ்சாவூர் அருகே ‘இன்னும்’ ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்துச்செல்லும் அவல நிலை!

‘யாருப்பா இப்ப சாதி பாக்குறா’ என்ற சொலவடை இருப்பதுபோல, இப்பலாம் பிணத்தை எறிக்க மெஷின் வந்துடுச்சி எல்லாம் மாறிடிச்சு என்ற மேட்டிமைச் சொற்களும் உலவுகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்ற நினைப்பு பலரிடம் உதிக்கும்போதெல்லாம் கிராமங்களில் இருந்து வரும் யதார்த்தம், ‘இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் மாறிவிடவில்லை’ என்று முகத்தில் அறைகிறார்போல சம்பவங்களை தந்துகொண்டே இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். … Read more

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கடந்த 2019- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது தொற்று … Read more

அனிரூத் சீரியல்களில் நடிக்க 2 ஆண்டுகள் தடை

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவற்றை சரி செய்து சீரியல்கள் மற்றும் சினிமாவை எடுத்து முடிப்பதற்குள் அந்த தயாரிப்பாளர் சந்திக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சினிமா துறையில் இருக்கும் இந்தப் பிரச்சனை அனைத்து மொழிகளிலும் இந்தியா முழுவதும் இருக்கிறது. அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கன்னட நடிகர் அனிரூத் 2 ஆண்டுகள் சீரியல்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். ஜோதே ஜோதேயாலி என்ற நாடகத்தில் நடித்து வந்தார். … Read more

லவ்வர் பக்கத்து பெட் எனக்குதான் வேணும்! மதுபோதையில் அடம்பிடித்த காதலனுக்கு அடி உதை!

தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரும் நண்பராக இருந்துள்ளனர். இந்நிலையில் உதயகுமார் போச்சம்பள்ளி அடுத்த கீழ் மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த வைஸ்ணவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் உதய குமாரின் மனைவியுடைய தங்கை (பள்ளி மாணவி) மீது காதல் கொண்ட பிரதாப் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி மாணவி  கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் போச்சம்பள்ளி அரசு … Read more

சென்னை எனது இரண்டாவது அன்னை: கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி

சென்னை மதுரவாயலில் பிரபல சங்கர நேத்ராலாய கண் மருதுத்துவமனையின் மருத்துவர் சுரேந்திரன் இல்லம் திருமண விழாவில் மணமக்கள் பத்ரி – இளவரசி புதுமண தம்பதிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில் “நான் சென்னையை சென்னை என்று மட்டும் அழைப்பதில்லை என் இரண்டாம் அன்னை சென்னை . நான் … Read more

2 மாதக் கை குழந்தையுடன் 12 மணி நேர படகு பயணம்… அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்கள் அண்றாட வாழ்க்கையை வாழவே கஷ்டப்பட்டு வருகின்றனர். அரிசி, பருப்பு, பால், எரிபொருள் என அனைத்துமே விலைவாசி விண்ணை தொடும் உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக இடையில் பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கேவையும் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலக நாடுகளிடம் இருந்து ஏற்கெனவே லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ள இலங்கை அரசு, பணத்தை திரும்பக் கொடுப்பது தற்போதைய சூழ்நிலையில் நிகழாது என … Read more

ஊத்துக்குளி வெண்ணை தொழிலுக்கு வந்த சிக்கல்

உலக புகழ்பெற்று விளங்கும் ஊத்துக்குளி வெண்ணை உற்பத்திக்கு தேவையான எருமைப் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு வருவதால்,வெண்ணை உற்பத்தி தொழிலே அழிந்து வருவதாக ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாரம்பரியமான வெண்ணை உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வந்த எருமைகளை விவசாயிகள் வளர்ப்பதை குறைத்தும், வளர்க்கும் எருமைகளை விற்பது அதிகரித்து வருவதால், ஊத்துக்குளியின் பெயரை உலக புகழ்பெற வைக்க காரணமாக இருந்த எருமை வெண்ணை உற்பத்தி முழுவதுமாக அழியும் நிலையை எட்டி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் … Read more

UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம்

UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கமான UPI, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்டு மூலம் பணத்தை செலுத்துவதற்கு மாற்றாகவும், டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான மற்றொரு தெரிவாகவும் தொடங்கப்பட்ட UPI இப்போது இந்தியாவிற்கு வெளியிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிரது. இதுவரை இலவசமாக பயன்படுத்தப்பட்ட இந்த வசதிக்கு இனி மேல் … Read more

மும்பையில் ஸ்கூட்டரில் ஜாலியாக ரைட் போன விராட் – அனுஷ்கா சர்மா: video

பிரபலமாக இருந்தாலும், ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும், சாலையோர கடைகளில் உணவருந்த வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத் தான் செய்யும். ரசிகர்கள் கூடிவிட்டால் அது பிரச்சனையாகிவிடும் என்பதற்காகவே அப்படியான தங்களின் ஆசைகளில் செய்யாமல் இருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில், விராட் கோலியும் – அனுஷ்கா சர்மாவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள். தங்களுக்கு என்னவெல்லாம் ஆசையாக இருக்கிறதோ, அதனை ஏதாவது ஒரு விதத்தில் செய்துவிட வேண்டும் என்பது தான் அவர்களின் இலக்கு. இருவருக்கும் ஜோடியாக ஒரு ஸ்கூட்டரில் மும்பை நகரத்தில் … Read more