சுவாதி கொலை… ராம்குமார் தற்கொலை – மீண்டும் விசாரணை; ரூ. 10 லட்சம் இழப்பீடு!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக, பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம் – காவலர்களுக்கு முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “ கோவை மாநகரில் கடந்த 23.10.2022 அன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டுவிடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை.  இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே … Read more

இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை: எச்சரிக்கும் வானிலை அறிக்கை

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 31.10.2022 அன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, … Read more

வடிவேலுவை போல சிறுவனை ரவுண்டு கட்டிய நாய்கள்!

கரூர் அருகே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லிங்கமா நாயக்கன்பட்டி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்து லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கின்றது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று எட்டு நாய்களுக்கு மேல் சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. … Read more

Indira Gandhi Death Anniversary : 'இந்தியாவை சிதைக்க விட மாட்டேன்' – ராகுல் காந்தி ட்வீட்

Indira Gandhi Death Anniversary : இந்தியாவின் ஒரே ஒரு பெண் பிரதமரும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளுமான இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி அவரின் இரு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.  இந்நிலையில், அவரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும், டெல்லி இந்தியா காந்தியின் … Read more

Wacth Video : கோலி, ரோஹித் செய்த தவறுகள் – அடுத்தடுத்த ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா!

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில், இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது.  அதில், பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்தியா – தென்னாப்பிரிக்க போட்டியில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 133 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் … Read more

தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? – அடுத்தடுத்து அப்டேட்!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது ‘வாரிசு’ படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் … Read more

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா! பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்

புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யா இடையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, ஐ.நா., மத்தியஸ்தம் கொண்ட கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதாக அறிவித்துள்ளது. பஞ்ச நெருக்கடியைத் தவிர்க்கவும், உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம்   அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் பிற தானியங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்ற கருங்கடலின் சுற்றியுள்ள பகுதியின் ஏற்றுமதியை ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் பாதித்தது. … Read more

குஜராத் தொங்கு பாலம் : விபத்துக்கு காரணம் இளைஞர்களா? – வைராலகும் வீடியோ… முழு விவரம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 300 கி.மீ., தூரத்தில் அமைத்திருந்திருக்கும் மோர்பி தொங்கு பாலம், நேற்று 6.42 மணியளவில் மொத்தமாக இடிந்து விபத்துக்குள்ளானது.  பாலம் இடிந்து விழுந்ததில், இதுவரை 132 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த தொங்கு பாலம் கட்டடப்பட்டுள்ளது. மச்சு ஆற்றில், சத்பூஜா என்ற பண்டிகையை முன்னிட்டு சடங்குகள் செய்ய வந்தபோது, 500 … Read more

ஆண்டிமடம் மார்வாடி கடையில் ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளை

மதுரை: அடகு கடை சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று கடைக்கு வந்த உரிமையாளர் சங்கர் மற்றும் பணியாளர்கள்  கடையை திறந்து பார்த்த போது கடையில் உள்ளே சுவற்றில் தொலையிட்டு இருப்பது கண்டு … Read more