திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைவாக மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலங்கள் மூலம் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.  இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வுருமாறு:  

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு  விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   100 விண்ணப்பதாரர்களுக்கு சேவை இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் 2022 ஜூலை 04 திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் விமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக, ஒரு நாள் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒரு நாள் … Read more

பெறும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மாறக்கூடும்

ஸ்ரீலங்கன் விமான சேவையானது முறையான திட்டத்தினூடாக நிர்வகிக்கப்பட்டால் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற முடியும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. செலவீனங்களைக் குறைப்பதன் மூலம் தேசிய விமான நிறுவனம் எதிர்காலத்தில் இலாபம் ஈட்டுவதை உறுதிப்படுத்த முடியும் என அழைப்பாளரான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல என்றும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் … Read more

திடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள்! பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு(Video)

நாட்டின் சில பகுதிகளில் கடல்  அலைகள் திடீரென நிலத்திற்குள்  புகுந்துள்ளன.  தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள்  வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி அக்குரல கஹவ தெல்வத்த பகுதியிலிருந்தும் கடல் அலைகள் காலி – கொழும்பு பிரதான வீதியை வந்தடைந்துள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனவே … Read more

அலுவலக பேருந்து சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அலுவலக பேருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்வேறு அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். குறைந்த விலையில் அலுவலக சேவை தனியார் பேருந்துகளுக்கு  தேவையான எரிபொருள் வழங்கினால், தற்போதைய பேருந்து கட்டணத்தை விட குறைந்த விலையில் அலுவலக சேவையை வழங்க முடியும் எனவும் அவர் … Read more

ஈரானில் நிலநடுக்கம் – 5 பேர் உயிரிழப்பு

ஈரானில் இன்று (02) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் 6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் … Read more

இலங்கைக்கு அரிசி: கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்தில் கப்பல்

இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து சிறிய ரக சரக்கு கப்பல்களை இயக்குவதற்காக துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கைக்கு அரிசி, உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதியும் பொருட்டு, தனியார் நிறுவனம் , சுமார் 500 தொன் சரக்குகளை கையாளக்கூடிய சிரிய ரக சரக்கு கப்பல் ஒன்றை புதுச்சேரி துறைமுகத்தில் … Read more

அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது! வெளியான தகவல்

எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடுகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று  வார இறுதி தேசிய பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி குறித்த  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கும் பாதிப்பு பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி சுகாதாரக் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு … Read more

மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூலை 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு … Read more

மியான்மருக்கு இலங்கை வழங்கவுள்ள நன்கொடை: ஒப்பந்தம் கைச்சாத்து

மியன்மாருக்கு 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலையீட்டில் இந்த நன்கொடை நடைபெறும். காலாவதியாகும் தடுப்பூசி இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசி மருந்துகளின் இருப்பு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் காலாவதியாகவுள்ளது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் , 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் வழங்குவதற்காகவும் … Read more