புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் மாணவன் (Video)

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வெளியாகிய 2021 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் … Read more

யாழ் மாவட்டத்தில் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்

இந்திய அரசின் நிதியுதவியுடன், யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ‘ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்’ யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் தொடக்கம் (13 ஆம் திகதி) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி ( Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti ) தொண்டு நிறுவனமும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் (13) நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் கூடத்தில் நேற்றைய (14) தினம்  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மூன்று அமர்வுகளாக இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றின் பட்டமளிப்பின் போது இம்முறையே ஒரேதடவையில் … Read more

டொலர், வெளிநாட்டு கையிருப்பு இல்லை! நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம் – அமைச்சர் பகிரங்கம்

தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை, வெளிநாட்டு கையிருப்பு இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை. வெளிநாட்டு கையிருப்பு இல்லை. நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம். இப்போது எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர், இது அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பேதமின்றி அனைவரும் … Read more

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கை – சவூதி அரேபிய … Read more

கடலுக்குப் பொறுப்பான பிரதான நிறுவனமென்ற வகையில் சட்டத்தை விரைவாகத் திருத்தி சட்டரீதியான  பலத்தை அதிகரிக்கவும்

நாட்டின் கடல்சார் சூழலை பாதுகாக்கும் பிரதான பொறுப்பை கொண்டுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டரீதியான அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் மறுசீரமைப்பை விரைவு படுத்துமாறு அண்மையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபையின் அலுவலர்கள் தெரிவித்ததுடன் இந்த சட்டத் திருத்தம் … Read more

முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்! இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது நாட்டிலிருந்த இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் செய்துள்ளது. அதன்படி, இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாமை காரணமாக இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என … Read more

இலங்கையில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 78.83 வீதமாக அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை வரையில் இலங்கையின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவுகளின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 42 இலச்சத்து 5 … Read more

கடனட்டை உபயோகிப்போர் மற்றும் அடகு வசதியை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் என்பவற்றின் கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது. அத்துடன் அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  … Read more