எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை! காத்திருப்பதில் அர்த்தமில்லை – முக்கிய அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறுமா என்பது உறுதியாகத்  தெரியவில்லை என பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். வரையறுக்கப்பட்டமுன்பதிவே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய அசௌகரியம்  மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு காரணமாக எரிபொருள் தாங்கி ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கான … Read more

இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை! மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கிறது

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  எரிசக்தி அமைச்சர் கஞ்சன  விஜேசேகர இது குறித்து அறிவித்துள்ளார்.  இதன்படி, எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  எரிபொருள் விலை அதிகரிப்பு இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது.  இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும். 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை … Read more

இலங்கையில் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்கலாம்! யாழில் பகிரங்க எச்சரிக்கை

நாடு மிக மோசமாக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது, அத்தியாவசிய உணவு, மருந்துகளுக்கு கூட பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இந்த நிலை நீடித்தால் பசியாலும் மருந்தில்லாமலும் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்க நேரிடலாம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். ஜே.வி.பியின் யாழ்ப்பாண மாவட்ட மாநாடு யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கி கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இந்த மோசமான நிலைக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்களே பொறுப்பு. … Read more

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்: 100% தேவையை பூர்த்தி செய்ய முடியாது

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று முதல் வாகன உரிமையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் , எரிபொருளை கொண்டுவருவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இந்நடவடிக்கை உரிய தினத்தில் மேற்கொள்ள முடியாமற்போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பாக 25 மாவட்டங்களின் செயலாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று கலந்துரையாடப்பட்டது. இதன் போது ஒவ்வொரு … Read more

எதிர்காலத்தில் எரிபொருள் பிரச்சினை இன்னும் மோசமாகும்!எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த எண்ணெய் தாங்கி கப்பலின் ஆர்டர் செய்வதில் கடன் கடிதம் விவகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் இறக்குமதி இந்நிலைமையால் பணத்திற்காக மட்டுமே எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் எரிபொருள் … Read more

இந்த வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு

மேல்மாகாணத்தில் ,கொழும்பு கல்வி வலயத்திலும் ,அதனை அண்மித்த நகரங்களிலும் ,ஏனைய மாகாணங்களில் உள்ள நகர பாடசாலைகளிலும், கடந்த வாரத்தில் போன்றே இன்று ஆரம்பமாகும் இந்த வாரத்திலும் பாடசாலைகளை நடத்துவதில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேபோன்று, இந்த வாரத்திலும் கடந்த வாரத்தில் கிராம பாடசாலைககளை நடத்தியது போன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பட்சத்தில் செய்வாய் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி இந்த வாரம்; கொழும்பு … Read more

ஒமிக்ரோன் BA.5 திரிபு குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் வகை BA.5 குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சமீபத்திய கோவிட்19 பரம்பரை BA.5 மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று கூறினார். “நாங்கள் அனைவரும் திசைதிருப்பப்படுகிறோம், ஆனால் இன்னும் தொற்றுநோய் பரவுகின்றது. BA.5 என்பது வேகமாக பரவக் கூடியது  சமீபத்திய கோவிட்19 பரம்பரை BA.5 என்பது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கண்டறியப்பட்ட மிகவும் … Read more

பிரித்தானியாவில் வசிக்கும் வசதியான பெண்ணாக காட்டிக்கொண்டு இலங்கை பெண் செய்த மோசடி

பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார வைத்தியராகக் காட்டிக் கொள்ளும் இலங்கைப் பெண் ஒருவர் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர்களுடன் முதலில் நட்பை ஏற்படுத்தி பேஸ்புக் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தனக்கு பல தொழில்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண், அதில் முதலீடு செய்து தொழிலில் ஈடுபடுமாறும் இளைஞர்களை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணின் வார்தையில் ஏமாற்றப்பட்ட … Read more

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

மட்டக்களப்பில் அனுமதிபத்திர முறைமையில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி, சுமுகமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில் நேற்று (25) மாலை நடைபெற்றுள்ளது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தின்போது … Read more

30 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிப்பு

பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 30 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேவையான அடிப்படைத் தகுதியைப் பூர்த்தி செய்யாததன் காரணமாக பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 70 கட்சிகளின் 30 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எஞ்சிய 40 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான நேர்முகப் பரீட்சை ,அடுத்த மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கட்சிகள் கடந்த 4 வருட காலப்பகுதியில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.