அமெரிக்காவுக்காக ரஷ்யாவை தவிர்க்கும் இலங்கை

அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.   சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது  என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு  நாட்டின் பிரதான பிரச்சினை சமூக … Read more

வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பதில் வரையறை – பொது மன்னிப்பு காலமும் அறிவிப்பு

வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பதில் வரையறை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது தெடார்பில் விதிமுறைகள மற்றும் நிபந்தனைகளில் திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தமதுவசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறையான வங்கி முறைக்குள் ஈர்க்கும் நோக்கத்துடன், நிதியமைச்சர் 2017 ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணிச் சட்டம் எண்.12 இன் பிரிவு 8 இன் கீழ் இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைலாக இலங்கை பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தம்வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத்தின் தொகை 15,000 அமெரிக்க … Read more

அணு குண்டால் ஜப்பானுக்கு ஏற்பட்ட அழிவுக்கு இணையான பொருளாதார அழிவு இலங்கைக்கு ஏற்படலாம்:விஜேவர்தன

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்துமாறு கோரி ஹெமில்டன் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளமை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். முழு கடனை திரும்ப செலுத்துமாறு கோரும் அமெரிக்க ரிசர்வ் வங்கி ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறி தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் … Read more

தேர்தல் சட்டங்கள் , தேர்தல் முறைமை: தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை 

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை அதன் தலைவர், சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தனவினால் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2021 மே 17 ஆம் திகதி முதன்முறையாகக் கூடிய இந்தக் குழு, பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அக்கறையுள்ள நிறுவனங்களிடமிருந்து பிரேரணைகளை கோரி வெளியிட்ட ஊடக அறிவித்தலுக்குப் … Read more

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தயார் நிலையில் பொலிஸார்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்கும் நபர்கள் தொடர்பில் வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த உத்தரவினைப்  பிறப்பித்துள்ளார். வழக்குத் தொடரப்படும்  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் கலவரம், மோதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்யுமாறு நிரப்பு நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வீடியோ காட்சிகளின் நகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து பொலிஸ் புத்தகங்களில் பதிவு … Read more

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அளவு மதிப்பீடு நிறுவனத்தின் அங்கீகாரம்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அளவு மதிப்பீடு (சிறப்பு) பட்டம் கற்கைநெறி, இலங்கையின் அளவு மதிப்பீடு நிறுவனத்தின் (IQSSL) நிபந்தனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) தகவல்களுக்கமைய, பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இடஞ்சார்ந்த அறிவியல் பீடத்தின் அளவு கணக்கெடுப்புத் துறையானது, அதன் இளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) பட்டப்படிப்புக்கான அளவு மதிப்பீடு நிறுவனத்தின் IQSSL அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மேட்கொண்ட முயற்சியின் விளைவாக இவ் அங்கீகாரம் கிடைத்துள்ளது என மேலும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில், அளவு மதிப்பீடு பட்டப்படிப்பு … Read more

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பில் ஒன்று திரண்ட திருநங்கைகள்!(video)

அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தெரிவித்து திருநங்கை சமூகத்தினரால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.  குறித்த ஆர்ப்பாட்டமானது பேரணியாக கொழும்பு காலி முகத்திடலில் அமைந்திருக்கும் கோட்டா கோ கம போராட்டக் களத்தை நோக்கிச் செல்கின்து.  எங்களுக்கான மரியாதையை தாருங்கள்.. இதன்போது, இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக … Read more

வன்னியில் முன்பள்ளி குழந்தைகளுக்கு இலங்கை இராணுவப் படையினரின் உபசரிப்பு

வன்னியில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடந்த விளையாட்டு விழாவின் போது பாலர் பாடசாலைக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கினர். இலங்கை இராணுவ ஊடகங்களின்படி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள 56ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தின் 562ஆவது படைப் பிரிவின் துருப்புக்கள், ஈச்சங்குளம் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு அண்மையில் (ஜூன் 17) நடைபெற்ற வருடாந்த விளையாட்டு விழாவின் போது அவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு சுவையான மதிய உணவை வழங்கி உபசரித்தனர். … Read more