நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி: முகாமையாளர் கைது(Video)

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நூற்றுக்கணக்கான லீற்றர் மண்ணெண்ணெய் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். சம்பவம் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று … Read more

தொழில்முனைவோருக்கான சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு

தொழில்முனைவோருக்கான சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு பட்டறை கண்டி மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கான வியாபார ஊக்குவிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (17) கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.   சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தங்களது தொழில்களை மேம்படுத்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுஇ கண்டி மாவட்ட செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் … Read more

உணவு உற்பத்திக்கான தேசிய போராட்ட நிகழ்ச்சித் திட்டம்

உணவு உற்பத்திக்கான தேசிய போராட்டம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல்  இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் காலங்களில் உள்ளூர் உற்பத்தியினை நுகர்வோருக்கு தங்குதடையின்றி வழங்குவதற்கு சமூக பொறுப்புடன் கடைமையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் வாழ்வாதார உதவிகள் மற்றும் வாழ்க்கை தரம் மேம்படுத்தும் செயற்திட்டம் தொடர்பாகவும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. … Read more

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி  அமைச்சு புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.  இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட்  மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  விடுமுறையின்றி தொடரும் கல்வி நடவடிக்கை குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி … Read more

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு நாட்டில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அதன்படி அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்தம்பிதமடைந்து முடக்கநிலைக்கு செல்லும் … Read more

தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க முழு ஆதரவு வழங்கப்படும்…தெ.கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் (Jeong Woonjin) தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி யூன் சுக்-யெயோல் (Yoon Suk-Yeol) மற்றும் அவரது கட்சிக்கும்(People Power Party) ஜனாதிபதி அவர்கள் … Read more

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் வரை அரச ஊழியர்களின் வேலை மற்றும் கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய திட்டம்!

எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி முதல்  இரண்டு வார காலம் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  அதேசமயம், பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு வார கால இணையவழி கற்றல் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.   விசேட சுற்றுநிரூபம் கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.  அதற்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலக பணிகள் மற்றும் … Read more

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புக்களை திட்டமிட்ட முறையில் விநியோகிக்கவும்… ஜனாதிபதி பணிப்புரை

தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று … Read more

புனித பொசன் போயா தினத்தில் ஜாதக கதைகள் ஒலிப் புத்தகம் வெளியீடு

இந்திய இலங்கை இராஜதந்திர உறவின் 75 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு, 2022 ஜூன் 14 ஆம் திகதி புனித பொசன் போயா தினத்தில் அனுராதபுரம் ருவான்வெலி மஹா சேயா வளாகத்தில் ஜாதக கதைகள் ஒலிப் புத்தகம் சிங்கள மொழியில் வெளியிட ப்பட்டது. செவிப்புலன் பாதிப்புடையவர்கள் பயன்பெறுவதனை இலக்காகக்கொண்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பானது 50 ஜாதகக் கதைகளைக் கொண்டுள்ளதுடன் ஜாதகட்டாகதைகள் என்ற தொகுப்பிலிருந்து நல்வழி என்ற தொனிப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொழில்நுட்ப … Read more

இலங்கையில் வெறுமையாகும் பல்பொருள் அங்காடிகள்

நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக  கூறப்படுகின்றது.   உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  விவசாய அமைச்சரின் தகவல்  இதேவேளை, இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த  அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே … Read more