மோடி தொடர்பில் சர்ச்சை கருத்து! திடீரென பதவி விலகிய இலங்கை மின்சார சபை தலைவர்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சை கருத்து அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் … Read more

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் முதல் Finalist.. அதிர்ச்சியில் உறைந்துபோன பிரபலம்

குக் வித் கோமாளி 3 விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து மூன்று சீசன்களாக மக்களுக்கு பிடித்த செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்கிறார்கள். 12 குக் கலந்துகொண்ட இந்த குக் வித் கோமாளி 3ல் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். இந்நிலையில், இதில் இன்று இம்யூனிட்டிகாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் … Read more

கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள கடுகதி ரயில் சேவை

எதிர்வரும் புதன்கிழமை(15) தொடக்கம் கொழும்பில் இருந்து கண்டி வரையான ரயில் பயணச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கடுகதி ரயில் காலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணியளவில் கண்டியைச் சென்றடையும் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக பிரசாத் தெரிவிக்கையில், குறித்த ரயில் கம்பஹா, ​வேயன்கொடை, பொல்கஹவெல, றம்புக்கனை, பேராதனை மற்றும் சரசவி உயன ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் தரித்துச் செல்லும். அத்துடன் … Read more

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் போட்டிப் பரீட்சை

நாடாளாவிய ரீதியில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 700 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அறிவித்துள்ளார். அதன்படி, கோட்டக்கல்வி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம், தேசிய பாடசாலைகள் என்பவற்றில் வெற்றிடங்கள் இதற்கமைவாக பூரணப்படுத்தப்பவுள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் மூன்று வாரங்களில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஜூன் 10 – 11ஆந் திகதிகளில் சிங்கப்பூரில் நடைபெற்ற 19வது ஐ.ஐ.எஸ்.எஸ்.-ஷங்ரிலா உரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் பங்கேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 10 – 11ஆந் திகதிகளில் சிங்கப்பூரில் நடைபெற்ற 19வது ஐ.ஐ.எஸ்.எஸ்.-ஷங்ரிலா உரையாடலில் பங்கேற்றார். ஐ.ஐ.எஸ்.எஸ்.-ஷங்ரிலா உரையாடல் ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சிமாநாட்டாகக் கருதப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு கோத்தாபய ராஜபக்ச அவர்களின் பிரதிநிதியாக அமைச்சர் பங்கேற்றார். அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கட்டார் அமீர் மாண்புமிகு ஹமத் அல் தானி ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் … Read more

இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.  யூரோ மற்றும் பவுண்டின் பெறுமதி அதேவேளை, யூரோ  எதிராக ரூபாவின்  பெறுமதி 40.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.  ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக 39.8 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.  ஜப்பானிய யென்னுக்கு எதிராக 35.1 சதவீதம் மற்றும் அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவீதம் என்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது … Read more

இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.’ எவ்வாறாயினும், கடந்த வருடம்(2021) மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் மே மாதம் அனுப்பப்பட்ட பணம் மிகக் குறைவானதாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த இரு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தொகை ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் அனுப்பி தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.  அதேசமயம் மே மாதம் அவர்கள் அனுப்பிய பணம், … Read more

மின்னல் தாக்கம் குறித்து அறிவுறுத்தல்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை, கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஜூன் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் … Read more