கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்புங்கள்! ரணிலுக்கு சஜித் ஆலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதுவுமே செய்ய முடியாது. எனவே, கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரணில் முதலில் இறங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகினால்தான் மக்களின் மனதை வென்று பிரதமர் ரணிலால் பணியாற்ற முடியும் என்றும் அவர் சஜித் சுட்டிக்காட்டினார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய … Read more

புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு கடமைகளை பொறுப்பேற்றார்

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக தற்பொழுது சேவையாற்றிவரும் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் புதன்கிழமை (8) முதல் இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான இவர், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியாகவும் நியமனம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது, இராணுவ தலைமையகத்திலுள்ள புதிய அலுவலகத்தில் வண மாபுல்கொட சுமணரதன தேரர் மற்றும் ஏனைய பௌத்த மத பிக்குகளின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவத்தின் … Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இன்று தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 217- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,133 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 17,887 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,231 … Read more

இந்திய கடன் உதவியில் கிடைக்கும் இறுதி எரிபொருள் கப்பல் இலங்கை விரைகிறது!

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் கிடைக்கும் இறுதியான எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை எதிர்பார்க்கும் இலங்கை இதன் பின்னர் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை எரிபொருளுக்கான கடனுதவியாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் இவ்வாறான சூழ்நிலையில், … Read more

நெதர்லாந்தில் நடந்த இராணுவ குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீரருக்கு வெள்ளிப்பதக்கம்

நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது. 16 இலங்கை பொறியியலாளர் சேவை படையணியை சேர்ந்த ஸ்டாப் சார்ஜென்ட் பண்டார 51 கிலோ எடைப் பிரிவின் கீழ் போட்டியிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

13 ஆம் திகதி குடிவரவு – குடியகல்வுத் திகைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் திறந்திருக்கும்

13 ஆம் திகதி குடிவரவு – குடியகல்வுத் திகைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் திறந்திருக்கும்  

66 வருடங்களில் 45 எம்.பிக்கள் படுகொலை

இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் தகவல் வெளியிட்டார். 19 மாதங்களுக்கு ஒரு கொலை பிரதமராக இருந்த எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் கொலையே முதலாவது படுகொலையாகும். இறுதியாக அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டார். ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் … Read more

 யூரியா உரம் கொள்வனவுக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இலங்கை அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில்,  யூரியா உரத்தினை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் இக்கடனுதவி குறித்த உடன்படிக்கை ஒன்று மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்றைய தினம்  (10 ஜூன் 2022) கொழும்பில் … Read more

பல அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

மேலும் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த 11 உணவுப் பொருட்களில் சீனி, பருப்பு, மா, வெங்காயம், உருளைக்கிழங்கு, பதிவு செய்யப்பட்ட மீன், பால் மா, உலர்ந்த நெத்தலி, காய்ந்த மிளகாய் மற்றும் கடலை ஆகியவை அடங்கும். தொடர்ந்து அதிகரிக்கும் விலை மற்றும் பற்றாக்குறை சீனி மற்றும் பருப்புக்கான கட்டுப்பாட்டு விலையை முதலில் நிர்ணயிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் … Read more

கல்வி நடவடிக்கை ஸ்தம்பிக்கலாம்! இரு மடங்காக உயர்ந்த விலை

எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில் கடதாசி  தட்டுப்பாடு நிலவி வருவதால், பயிற்சி புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிகரிக்கும் விலை பல வகையான பயிற்சிப் புத்தகங்களின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம் பயிற்சிப் புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை என்றும், புதிதாக கொள்வனவு செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட  … Read more