இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா மறுப்பு

ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்த போது ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய தூதவரை நேரில் சென்று சந்தித்தேன். நான்கு நிறுவனங்களின் பட்டியலை தூதுவர் என்னிடம் கொடுத்தார். அதாவது, எரிபொருள் ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையே செய்யப்படாதென ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ள … Read more

மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்….

மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தனர். ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் தூதுவர்களிடம் விளக்கினார். தற்போதைய நிலைமையைத் தீர்ப்பதில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இதுவரை அந்நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மத்திய … Read more

இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்படும் பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா..! வெளியாகியுள்ள உண்மைத் தகவல்

இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் உண்மை விடயத்தை வெளியிட்டுள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டினை மீண்டும் கட்டியெழுப்புதல் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு … Read more

தொழிற்சங்க நடவடிக்கையால் நாட்டில் மின் விநியோக தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயற்பட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மின்சார சபையின் பொறியியலாளர் சங்க தலைவர் அனில் இன்டுருவ, … Read more

பிரபல நாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 15 இலங்கையர்கள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரியவந்துள்ளது. இலங்கையர்கள் நாடு கடத்தல் கடந்த 19 நாட்களுக்கு முன்னர் அவர்கள் இழுவை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த போது, ​​அவர்களது இழுவை படகில் … Read more

இலங்கைக்கு எப்போது விடிவு கிட்டும்….! ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடனும் கலந்துரையாடினேன். இதன் போது தனக்கு சாதகமான பதில் கிடைத்தள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடன் உதவிகளை பெற முடியும். நான் முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றேன். என்னால் இயலுமான அனைத்தும் செய்யப்படும். செப்டெம்பரில் இலங்கைக்கு விடிவு செப்டெம்பர் மாதமளவில் நாட்டிற்கு தேவையான … Read more

இலங்கையில் பேருந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ வழங்கியுள்ளார்.  அதன்படி நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் பேருந்து கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்கவும். பேருந்து கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல … Read more

நாட்டின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்கங்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். எனினும், தற்போது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்திருந்தனர். எனினும், ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, … Read more

ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் – முன்னாள் அமைச்சர் ஆரூடம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி கணித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் எதிர்வரும் மாதங்களில் சர்வதேச ஆதரவின் ஊடாக மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சலுகைகள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் உலக … Read more

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவியை அறிவித்தது சீனா!

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், அந்த நாட்டுக்கு அதன் திறனுக்குள் உதவி செய்து வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாளாந்த செய்தி சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த கருத்துக்களை தெரிவித்தார். சீனா இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளதாக அவர் இதன் போது கூறியுள்ளார். வெளிநாட்டுக் … Read more