கடவுச்சீட்டை ஒப்படைக்க தவறிய மகிந்த – நீதிமன்றில் அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மாதம் 9ம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மகிந்த ராஜபக்ச … Read more

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை ஆதரவளிக்காத காரணத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்கும் கோரிக்கையை அமைச்சரவைக்கு முன்வைக்கவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பதிலாகஇ மின் உற்பத்தி செலவைக் குறைக்கஇ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை இலங்கை மின்சார சபை தொடர வேண்டும் என்று அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும்இ இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மூன்று … Read more

பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் பசில்! இறுதி தீர்மானம் நாளை

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பசில் ராஜபக்ச  நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை தீர்மானம் நாளை முற்பகல் 11 மணிக்கு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பது தொடர்பான அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பின்போது  பசில் ராஜபக்ச வெளியிட … Read more

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் ,இரண்டாவது சரத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இன்று (08) மாலை இதுதொடர்பாக அறிவித்துள்ளார். அரசாங்க கூட்டுத்தாபனம் , திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் நியோகிக்கப்படும் மின் விநியோகம் மற்றும் வைத்திய சாலை சேவை … Read more

ஜனாதிபதி சற்று முன்னர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.   Source link

செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு….  

இலங்கைக்கு கிடைக்க உள்ள மருந்துப் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் முதல் கிடைக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கையிருப்பு உரிமையாளர்கள் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதார … Read more

முறையற்ற நிதி முகாமைத்துவம் நாட்டின் நெருக்கடிக்கான காரணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்ட கூற்று தொடர்பான பாராளுமன்ற விவாதம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்றது. நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு காணப்படுவதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முறையற்ற நிதி முகாமைத்துவம் தற்போதைய நிதி நெருக்கடிக்கான காரணமாகும். இதனால், அரச செலவினத்தைக் குறைத்து, அரச வருமானத்தை மேம்படுத்துவது அவசியமாகும் என அவர் கூறினார். அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலிலிருந்து விலகிச் செயல்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அனைத்துப் பொருட்களின் … Read more

நள்ளிரவுடன் இருளில் மூழ்கப்போகும் இலங்கை – யாவும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார். தங்கள் கோரிக்கைக்கு அமைச்சர் செவிசாய்க்கவில்லை.நாளைய தினம் மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசியல்வாதிகள் நாட்டை பேரழிவிற்குள் தள்ளியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் … Read more

வவுனியா மாவட்டத்தில் வெற்றிகரமான வெற்றிலை செய்கை 

வவுனியா மாவட்டத்தில் வெற்றிகரமான வெற்றிலை செய்கை என,தேசிய உணவு உற்பத்தி திட்டம் மற்றும் சேதனபசளை வேலைத்திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. வவுனியா களுகுன்னமடுவ பகுதியில் சேதனபசளையை பயன்படுத்தி பயிரிடப்பட்ட வெற்றிலை தோட்டத்தின் மூலம் வெற்றிகரமான அறுவடையை கிடைத்திருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.   சந்தையில் வெற்றிலைக்கு அதிக கேள்வி நிலவுவதோடு, இரசாயன உரங்களை பயன்படுத்தாது சேதனபசளையை மாத்திரம் பயன்படுத்தியதில் மிகக்குறைந்த செலவில் தாம் அதிக இலாபம் ஈட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. … Read more