செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு….  

இலங்கைக்கு கிடைக்க உள்ள மருந்துப் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் முதல் கிடைக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கையிருப்பு உரிமையாளர்கள் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதார … Read more

முறையற்ற நிதி முகாமைத்துவம் நாட்டின் நெருக்கடிக்கான காரணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்ட கூற்று தொடர்பான பாராளுமன்ற விவாதம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்றது. நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு காணப்படுவதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முறையற்ற நிதி முகாமைத்துவம் தற்போதைய நிதி நெருக்கடிக்கான காரணமாகும். இதனால், அரச செலவினத்தைக் குறைத்து, அரச வருமானத்தை மேம்படுத்துவது அவசியமாகும் என அவர் கூறினார். அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலிலிருந்து விலகிச் செயல்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அனைத்துப் பொருட்களின் … Read more

நள்ளிரவுடன் இருளில் மூழ்கப்போகும் இலங்கை – யாவும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார். தங்கள் கோரிக்கைக்கு அமைச்சர் செவிசாய்க்கவில்லை.நாளைய தினம் மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசியல்வாதிகள் நாட்டை பேரழிவிற்குள் தள்ளியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் … Read more

வவுனியா மாவட்டத்தில் வெற்றிகரமான வெற்றிலை செய்கை 

வவுனியா மாவட்டத்தில் வெற்றிகரமான வெற்றிலை செய்கை என,தேசிய உணவு உற்பத்தி திட்டம் மற்றும் சேதனபசளை வேலைத்திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. வவுனியா களுகுன்னமடுவ பகுதியில் சேதனபசளையை பயன்படுத்தி பயிரிடப்பட்ட வெற்றிலை தோட்டத்தின் மூலம் வெற்றிகரமான அறுவடையை கிடைத்திருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.   சந்தையில் வெற்றிலைக்கு அதிக கேள்வி நிலவுவதோடு, இரசாயன உரங்களை பயன்படுத்தாது சேதனபசளையை மாத்திரம் பயன்படுத்தியதில் மிகக்குறைந்த செலவில் தாம் அதிக இலாபம் ஈட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. … Read more

சப்புகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் எரிபொருள் பவுசரை மறைத்து வைத்திருந்த நபர் கைது

சபுகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் 3500 லீற்றர் டீசல் அடங்கிய எரிபொருள் பௌசரை மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில்  50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன முகாமில் STF குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக STF தெரிவித்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு ரூ. 1.4 மில்லியன்.    

வாகன உதிரிப்பாகங்களின் விலையில் மிகப் பெரிய அதிகரிப்பு

வாகனங்களின் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை 100 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வாகனத்திற்கான மின்கலங்களின் விலைகளிலும் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.   டயர்களின் விலை அதிகரிப்பு ரூ.50,000 ஆக இருந்த பேருந்து டயரின் விலை தற்போது ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லொறி டயர் ரூ.21,000 ஆக இருந்தது, தற்போது ரூ.34,000 முதல் ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.9,500க்கு விற்கப்பட்ட  டயர்கள் தற்போது ரூ.16,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார் … Read more

யாழ்ப்பாணத்திற்கான ஒரு ரயில் பயணத்திற்கு ரூபாய் 3 இலட்சம் நஷ்டம்

ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த … Read more

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் கடற்படையினரால் கைது

மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில விடுதியில் தங்கியிருந்த 13 ஆண்கள், 09 வயது சிறுவன் மற்றும் இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரும் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி இழுவை படகை அவதானித்த கடற்படையினர், … Read more

இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு – வீசா இன்றி பல நாடுகள் செல்ல சந்தர்ப்பம்

வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று Ratata Hetak ஹெடக் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக Ratata Hetak நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சரத் களுகமகே தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் கடவுச்சீட்டு மீதான சர்வதேச தரவரிசைகளின்படி, இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் குறைந்த … Read more

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

முகத்துவார பதியில் 01 கிலோ 192 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன முகாமில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர். சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த 24 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸ் விசேட … Read more