கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது குறித்து ஆராய்வு – கடற்றொழில் அமைச்சர்

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்ளுதல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (07) கடற்றொழில் அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது பங்கதெனியவில் நக்டா நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை, கொடுவா உட்பட்ட கடலுணவுகளுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் ஆலோசனைநடத்திபல்வேறு … Read more

ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.   சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மே 9 வன்முறை சம்பவங்கள் கடந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் பல பிரதேசங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  Source link

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (07) திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான செயற்பாட்டின் ஒரு அங்கமான சாரணிய இயக்கத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் செயற்பாட்டிற்கமைய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் ஆர்.பாஸ்கdpன் வழிகாட்டலின் கீழ் குழுச் சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மன் தலைமையில் குருளைச் சாரண தலைவர்களான என்.பிரதீபன்,திருமதி.ஜே.விநாயகமூர்த்தி, திருமதி.சீ.பஞ்சேந்திரன் ஆகியோரால் 36 மாணவர்களுக்கு பெற்றோரின் பங்களிப்புடன் சின்னஞ் சூட்டும் … Read more

மாகாண பாடசாலைகளில் 8000 ஆசிரிய வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள மாகாணப் பாடசாலைகளில் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முதல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை ,வெற்றிடங்களுக்கு நியமிக்க … Read more

இலங்கைக்கு இன்று எரிவாயுவுடன் வந்துள்ள கப்பல்

எரிவாயு ஏற்றிக் கொண்டு கப்பலொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று வருகை தந்திருக்கும் கப்பலில் 3900 மெட்ரிக் தொன் எரிவாயு நிரப்பப்பட்டுள்ளது. தற்போதைக்கு எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வழமைக்கு திரும்பவுள்ள எரிவாயு விநியோகம் இன்றையதினம் லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இன்றைய கப்பலில் எடுத்து வரப்பட்டிருக்கும் எரிவாயு கொழும்பு மற்றும் கம்பஹா … Read more

கட்டார் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

கட்டார் அரசிற்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சோரூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 06ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் பின்னடைவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், தூதுவர் அல்-சொரூரிடம் விளக்கினார். இலங்கை – கட்டார் இருதரப்பு உறவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்திய … Read more

இலங்கையில் நடக்கும் கொலைகள்: புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவல் – செய்திகளின் தொகுப்பு

சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமையக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்குச் சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி … Read more

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு! வெளிவந்துள்ள அறிவிப்பு (Video)

பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் 2022 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 87000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக 40000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி … Read more

கொழும்பு துறைமுகம் உலகில் 22வது இடத்தில்

கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P  குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ் சமத்திர, வர்த்தக மற்றும் விநியோகப் பிரிவு மற்றும் உலக வங்கியின் உலகளாவிய போக்குவரத்து நடவடிக்கை ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படும் CPPI  அல்லது கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் 2021 இந்தத் தரவுகள் பதியப்பட்டுள்ளன. இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் … Read more