உணவு பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்… அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும் ஜனாதிபதி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். இன்று (30) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் … Read more

நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது. 155 அடி உயரம் கொண்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 113.57 அடியாகவும் (73.27%),,120 அடி கொண்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43. 29 அடியாகவும் (36.8%) காணப்படுவதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து லக்சபான, புதிய லக்சபான, விமல சுரேந்திர, மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர் மின் … Read more

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை: உலக வங்கி

உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. உலக வங்கியின் நிலைப்பாடு எனினும் இது தொடர்பில் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். “உலக வங்கி இலங்கைக்கு அவசரகால கடன் அல்லது புதிய கடன்களை வழங்கி ஆதரவளிக்க … Read more

மகிந்த தாக்கியதாக பகிரப்படும் செய்தி: குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள உண்மைத் தகவல்

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்தி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளார்.  பகிரப்படும் செய்தி குமார் சங்கக்காரவை மகிந்த ராஜபக்‌ச தாக்கியுள்ளதாக செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே குமார் சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டுவிட்டர் பதிவு இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், குறித்த செய்தி அடிப்படை … Read more

13ம் திருத்தச் சட்டம் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது! மகாநாயக்கர்கள் – செய்திகளின் தொகுப்பு (Video)

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்று மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச நேற்று கண்டியில் அஸ்கிரி – மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி தொடர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் 13ம் திருத்தச் சட்டம் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத்தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும் என மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பான விரிவான … Read more

அட்டுலுகம சிறுமி விவகாரம்! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்

நாட்டையே உலுக்கிய அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள 9 வயது ஆயிஷாவின் கொலை சம்பவம் தொடர்பில், சிறுமியுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்த அயலவர்  ஒருவர் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு  வந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகை தருவதாகவும் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் உலக வங்கியிடம் உதவி கோரல்  

கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கியிடம் அமைச்சர் பீரிஸ் உதவி கோரினார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களின் தீவிரமான தன்மையை … Read more

எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.  பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் வரவு சுமார் 75 சதவீதமாக குறைவடைந்திருந்ததாகவும், கொள்வனவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட  குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வு  தற்போது … Read more

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களிலும் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

கடற்பகுதிகளில் பலமான காற்று, கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு … Read more