நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று(28) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த பயனாளர்களுக்கு முதற் கட்டமாக … Read more

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய நிவாரண மண்ணெண்ணெய்

இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் ஊர்காவற்துறையில் நேற்று (28) பகிர்ந்தளிக்கப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.   கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் ,கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் , அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ நடராஜன் ஆகியோர் கையளித்தனர்.  

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய திட்டம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனுமதி

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த புதிய திட்டம் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார். வருகிறது மின்சார கட்டணத்தில் அதிகரிப்பு யோசனை!  நடைமுறையாகும் புதிய திட்டம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமெரிக்கத் தூதுவர் சுங்குடன் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை 2022 மே 27, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இருதரப்பு உறவுகள், தற்போதைய உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் உதவி ஆகியன குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கும், தெளிவான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் அரசாங்கம் … Read more

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி! யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்பட்ட நிலை

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த விமான நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது. வட பகுதியில் உள்ள மக்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவுடன் தென்பகுதிக்கு வந்து செல்வதற்கும் தென்னிந்தியாவிற்கு சென்று வருவதை நோக்கமாக கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  டொரின் பெறுமதி அதிகரிப்பு அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நிலையான பெறுமதியில் இலங்கை ரூபா  இதேவேளை ரூபாவின் பெறுமதியை கடந்த இரண்டு வாரங்களாக நிலையானதாக … Read more

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க செயலி மூலம் எரிபொருள் சேகரிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் (27) மாத்திரம் பல தடவைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்த 1200 இற்கும் அதிகமானவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் … Read more

9ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறை: மற்றுமொரு அடையாள அணிவகுப்பு

கடந்த மே மாதம் 9ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணைக்காக மற்றுமொரு அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த வழக்கிற்கு சட்ட மா அதிபரின் நேரடி கண்காணிப்பு இடம்பெறுகிறது. வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு விரைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 2 … Read more

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதில் குறிப்பாக அரசாங்கத்தின் மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவு குறைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் … Read more

21ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ஒரு நபரை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படவில்லை

அரசியல் அமைப்பில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார் பார்ப்பாகும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார். 20ஆவது யாப்பு திருத்தத்திலுள்ள குறைகளை சரி செய்து 21ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அரசியல் யாப்பு தொடர்பில் பல ஜனாதிபதிகளின் கீழ், அடிக்கடி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.. சில சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் யாப்பை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 21ஆவது அரசியல் … Read more