வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தகவல்களை உடனடியாக பரிமாற்றிக் கொள்ளக்கூடிய செயலி

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களைக் கண்காணித்து,அதுதொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக பரிமாறிக் கொள்ளக்கூடிய செயலி (App) தற்போது நாட்டில் பல இடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் இந்த செயலி (App) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்களின் வாகனத்தின் இலக்கத்தகடு குறித்த விபரமும் … Read more

இலங்கையில் என்ன நடக்கிறது….. வெளிநாட்டு மக்களிடம் ஜேர்மன் தம்பதியினர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வன்முறைகள் வெடிப்பதாக வெளிவரும் செய்திகளினால் சுற்றுலா பயணிகள் இலங்கை செல்வதனை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஜேர்மன் தம்பதியினர் தற்போதைய நிலைமை தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை அந்த காணொளியில் தாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்ததாகவும் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தோம். நாங்கள் முதலில் கண்டியில் இருந்து பயணத்தை … Read more

உக்ரைனுடைய ஒவ்வொரு அடிக்கும் தவறாமல் திருப்பி அடிக்கும் ரஷ்யா… இதை கவனித்தீர்களா?

முன்பு மரியூபோல் நகரை ரஷ்யா பிடிக்கத் திட்டமிட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்தனர் உக்ரைன் வீரர்கள். ஆனால், விடாமல் தாக்கி, பலரைப் படுகொலை செய்து, எஞ்சியிருந்தவர்களையும் மீட்பதுபோல் மீட்டு… இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! மரியூபோலை இப்போது பார்த்தால், சூறாவளி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்ற ஒரு ஊரைப்போல இருக்கிறது. அதேபோல, சில நாட்களுக்கு முன், புடின் ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர், ரஷ்யாவுக்குச் சொந்தமான ஒரு அதிநவீனப் போர் வாகனத்தைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருந்தார். டான்பாஸ் … Read more

சில விடயங்களுக்கு தீர்வு இன்றி கூட்ட அறிக்கையாக தொடருகிறது – முல்லைத்தீவு அரசாங்க அதிபர்

முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று (27) காலை மாவட்ட செயலக பேரவை மாநாட்டு மண்டபத்தில் செயலி ஊடாக இடம்பெற்றது. கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான கே.லிங்ககேஸ்வரனின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டத்தின் பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டாலும் சில விடயங்கள் தீர்வு காணப்படாது தொடர்ச்சித்தன்மையுடன் கூட்ட அறிக்கைகளில் வருவதாக மாவட்ட … Read more

தேவையான உணவுப் பயிர்களை தாமே உற்பத்தி செய்ய வசதி

பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு

இலங்கையில் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாராவிடம் தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று காலை இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாரா உள்ளிட்ட ஜப்பானிய மூத்த … Read more

பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மது கனி பொலிஸாரை கேட்டுக்கொண்டார். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் ,  மக்களுக்கு அரசின் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் இலகுவான முறையில் அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்று கொடுப்பது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலக மண்டப கேட்போர் கூடத்தில் இன்று (27) நடந்த கூடத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எரிபொருள் மற்றும் அத்தியவசிய தேவைகளை … Read more

இலங்கை அணி  வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி   10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 506 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி போட்டியின் இறுதி நாளான இன்று (27)  அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more

இன்று பதிவான டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி  364 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது.  அதேசமயம், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி இன்றைய தினம் யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி  381 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.  பவுண்ட் ஒன்றின் … Read more