நாளாந்தம் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை

இன்று முதல் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். காஸ் சிலிண்டர்கள் அடங்கிய இரண்டு கப்பல்களுக்கு நேற்றிரவு பணம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இற்கமைவாக 2,800 மெட்ரிக் தொன் காஸை தரையிறக்கும் பணி நேற்றிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: வெளியான தகவல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதை மட்டுப்படுத்தல் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.  நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் சம்பளம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி … Read more

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் – நாட்டு மக்களிடம் கோரிக்கை

  இன்றைய தினம் (18) கொழும்பு துறைமுகத்திற்கு வரவிருக்கும் கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கி விநியோகிக்கப்படும் வரை நாட்டில் பெற்றோல் கிடையாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சுமார் 2000 மெற்றிக் தொன் பெற்றோலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகித்த போதிலும் அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே, பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்திய கடன் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ள … Read more

சிறய ரக வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்கள்

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய கார்கள் மற்றும் வான்களில் இன்றைய தினம் (17) நாடாளுமன்றத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையின் போதும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மிகக் குறைவான சொகுசு வாகனங்களே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாடாளுமன்ற … Read more

முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு (Photo)

முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளுபிட்டியின் இருந்து காலிமுகத்திடல் வரை நடை பேரணியாகச் சென்றவண்ணம் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது. அவர் இறந்து இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Source link

ஞான அக்கா வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம்: 8 பேர் கைது

கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞான அக்காவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கடந்த வாரம் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அது வன்முறையாக மாறியது. அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட முக்கிய உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதன் போது அநுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் ஹோட்டல் … Read more

நாடு முழுவதும்,நாளை முதல் “டெங்கு” ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு நோய் பரவலைத்தடுக்க கட்டுப்படுத்தும் வகையில் நாளை (18) முதல் மே 24 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். எமது செய்தி பிரிவுக்கு இன்று (17) இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட அதிக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்களின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த … Read more

பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமற்போனதன் மீதான பாராளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த பிரேரணையை எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார். … Read more

பிரதமர் குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்! ரணிலை கடுமையாக சாடிய சுமந்திரன்

ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்காக நிலையியற் கட்டளையை இடைநிறுத்துவதா என்பது குறித்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த பிரதமர் ரணிலை  சுமந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தேச விவாதம் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஒரு பகுதியே என தெரிவித்துள்ள சுமந்திரன் … Read more

எரிபொருள் விநியோகத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை

எரிபொருளை வழங்கும் போது, விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அனுராதபுர மாவட்ட விவசாயக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு, அதற்கான வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறுபோக செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதற்காக பயன்படுத்தப்படும் ட்ரெக்டர் வண்டிகளுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால், விவசாயிகள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கான உடனடி தீர்வை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதில் … Read more