ஊடக அறிக்கை

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கௌரவ அஜித் ராஜபக்க்ஷ மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கௌரவ அஜித் ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் கௌரவ அஜித்த ராஜபக்க்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், கௌரவ சமன்பிரிய ஹேரத் இதனை வழிமொழிந்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜேயரத்ன அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச … Read more

திருகோணமலையில் இருந்து வெளியேறிய மகிந்த:கொழும்புக்கு அருகில் தங்கி இருப்பதாக தகவல்

பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் மைனா கோ கம ஆகியவற்றின் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் போராட்டம் … Read more

நாடு முழுவதும், நாடு முழுவதும், ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு நோய் பரவலைத்தடுக்க கட்டுப்படுத்தும் வகையில் நாளை (18) முதல் மே 24 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். எமது செய்தி பிரிவுக்கு இன்று (17) இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட அதிக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்களின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த … Read more

ஒரே மாதத்தில் 226 மில்லியன் ரூபாய் செலவிட்ட பிரதமர் – ரணில் எடுத்த அதிரடி நடவடிக்கை

எதிர்வரும் ஜுன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.   நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  பிரதமர் அலுவலக பராமரிப்புக்காக ஜனவரி மாதம் 92 மில்லியன் ரூபாய், பெப்ரவரி மாதம் 99 மில்லியன் ரூபாய், மார்ச் மாதம் 226 மில்லியன் ரூபாய், ஏப்ரல் மாதம் 75 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளன.   அத்துடன், பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு … Read more

எரிவாயுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இன்று (18) இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும் மற்றொரு கப்பல் நாளைய தினம்  நாட்டை வந்தடையவுள்ளதாகவும்,  இரண்டு கப்பல்களுக்கும் பணம் இன்று செலுத்தப்படும் என்றும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் (18) தினந்தோறும் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ … Read more

சொத்துக்களை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதி

கடந்த நாட்களில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன. வன்முறைகளினால் வீடு மற்றும் சொத்துக்களை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதல் பணி என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த வன்முறைச் செயற்பாடுகளை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் அரசாங்க பிரதம கொறடாவாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன சிவகார்த்திகேயனின் மனைவி – அதிர்ச்சி புகைப்படம்!

 தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவாகார்த்திகேயன். அண்மையில், இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இவர், திரையுலகிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிவா இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். 18 வருடங்களுக்குப் பிறகு இன்று … Read more

மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பினை ஒழிப்பதற்கான சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதாரவழிகாட்டி ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் … Read more