கோவிட் தொற்றுக்குள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு

கோவிட்  தொற்றுக்கு உள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது பிரசவத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என வைத்தியர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான வதந்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். Source link

பசிலின் அதிரடி அறிவிப்பால் கொந்தளிக்கும் சிங்கள மக்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார். போதிய மழையின்மையினால் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி … Read more

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022மார்ச் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் ,சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றம்

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சேவை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  அமைச்சு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த பதற்றமான சூழல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில் குறித்த கட்டடம் பல உரிமையாளர்களைக் கொண்டது … Read more

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களுக்கு பயிற்சி பட்டறை

புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (07) பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர்கள் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. ஜெஃபர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பயிற்சி பட்டறையின் வளவாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார். இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய விரிவுரையாளர்கள் பணி தொடர்பான, புதிய நோக்கம் , தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது … Read more

எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் – ஹெலிகொப்டரில் சுற்றித் திரியும் பிரபுக்கள்! கொந்தளித்த மக்கள்

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் ஹெலிகொப்டரில் மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக தென்னிலங்கை மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அண்மையில், எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, ​​ஹெலிகொப்டர் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்து சுற்றி திரிவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், மேலும் தெரியவருவதாவது, குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த போது, … Read more

உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. அதன்படி, கும்பகொட ஆரா சந்தியிலிருந்து கடதாசிச் தொழிற்சாலை தொழிற்சாலை – தலாவ வீதி (4.15 கி.மீ.), கலகெடி ஆரா – நுகே குறுக்கு வீதி (1 கி.மீ.), ஹிங்குர ஆரா … Read more

வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களிடமும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டார். Source link

நெதுன்கமுவே ராஜா ஹஸ்திராஜயாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஸ்ரீ தலதா புண்ணிய கரடுவவை ஏந்திச் சென்ற இறந்த, நெதுன்கமுவே ராஜா ஹஸ்திராஜயாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ஹஸ்திராஜயாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று அதற்காக ஹஸ்திராஜயா இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு2022-03-07