மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த … Read more

இலங்கையில் முழுமையாக முடங்கும் ஆபத்தில் பேருந்து போக்குவரத்து! கடுமையான எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் ஆபத்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. சிலர், தாம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அதிலும் குறிப்பாக டீசலை பெறுவதற்காக ஒரு சில மணித்தியாலங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை இன்னும் சில சாரதிகள், தாம் 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் எரிபொருள் முறையாக … Read more

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள் , தென்னை நார் உற்றபத்திகள், தென்னை மட்டைகள் உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களத்தின் நேற்றைய தின (02) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் உள்ளூர் … Read more

கொத்துக் கொத்தாக சரணடையும் இராணுவ வீரர்கள்: திகைக்க வைக்கும் உக்ரைன் – செய்திகளின் தொகுப்பு

உக்ரைன் – ரஷ்யப் போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்யத் துருப்புகள் உக்ரைனில் கூட்டமாகச் சரணடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் … Read more

44 கோடி பேரை பாதித்த கொரோனா வைரஸ்

தற்போது உலகம் முழுவதும் 44 கோடி பேருக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 6 … Read more

அதிகரிக்கும் போர் பதற்றம்! பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதலில், பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியதுடன், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனால், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகள் பெலாரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள … Read more

உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் – ஐ.நா

ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உக்ரைன் நாட்டு மக்கள் அண்டைய நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதேவேளை ,ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 40 இலட்சம் அல்லது 40 இலட்சத்துக்கு அதிகமான … Read more

கச்சத்தீவு திருவிழாவில் 100 பக்தர்கள் மாத்திரமே பங்கேற்க அனுமதி (Photos)

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 50 பேரும் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்பவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றிருந்தது.  இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி … Read more

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்… ஜனாதிபதி பணிப்புரை

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்தப் பணிப்புரையை விடுத்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை … Read more

நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம்! தேரர் பகிரங்க அறிவிப்பு (Video)

நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். “முழு நாட்டையும் சரியான பாதைக்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்த சக்தியாக செயற்படுவோம். அமெரிக்க பிரஜையின் அதிகார செயற்பாட்டிற்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். … Read more